நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில்  சென்னையில் 18 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.


கடந்த 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகராட்சி 1ஆவது வார்டில் திமுகவின் சிவகுமார், 8ஆவது வார்டில் திமுகவின் ராஜகுமாரி வெற்றி பெற்றுள்ளனர். மேலும், சென்னை மாநகராட்சி 29,34,49,59,94,115, 121,168,174,187 ஆகிய வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 196ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் அஸ்வினி கருணா வெற்றி பெற்றுள்ளார். அவர் 1040 வாக்குகள் வெற்றி வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும், 23ஆவது வார்டில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ராஜன் வெற்றி பெற்றுள்ளார்.




TN Urban Election Results 2022 LIVE: ஜெயிக்கப்போவது யாரு? மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியை கைப்பற்றுவது யார்? அடுத்தடுத்து அப்டேட் இதோ!




தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு  தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 


Chennai Corporation Election Result: சென்னையில் கொலை செய்யப்பட்ட திமுக வட்ட செயலாளர் மனைவி வெற்றி..!


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிட்பில் வீடியோக்களை காண