தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே சூழியக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகள் கனகவல்லி (33). திருமணமாகாத இவர் நாள்தோறும் காலை 8 மணிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்வார், மீண்டும் மாலை 6 மணிக்கு வீடு திரும்புவார். இதே போல் சம்பவத்தன்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளார், மாலை ஆடுகள் மட்டும் வீடு திரும்பி இருக்கின்றன. ஆனால் கனகவல்லி வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இரவு ஆகியும் கனகவல்லி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வழக்கமாக ஆடு மேய்க்கச் செல்லும் இடங்களில் தேடி உள்ளனர். இந்நிலையில் அதே கிராமத்தில் அடர்ந்த வனப்பகுதியில் ஆடைகள் கலைந்த நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உடல் முழுவதும் காயங்களுடன் கொடூரமாக கொலை செய்து சடலமாக கனகவள்ளி கிடந்தார்.


இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கனகவல்லியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தடயவியல் நிபுணர்கள், சம்பவ இடத்தில் கிடந்த மீன் பிடிக்கும் தூண்டில்கம்பினை மீட்டு அதன்பேரில் காவல்துறையினர் துரிதமாக விசாரணை நடத்தினர். இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி (28) என்பவரை பிடித்து போலீஸார் விசாரித்து கைது செய்தனர்.




இதுகுறித்து போலீஸார் கூறுகையில்: வடவாறு கரையில் பெரியசாமி மீன்பிடித்துக் கொண்டிருப்பார். அப்போது ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த கனகவல்லி தனிமையில் இருப்பது அறிந்து அவரிடம் பாலியல் தொல்லை செய்து வந்தார். இது குறித்து, கனகவல்லி, பெரியசாமிக்கு பயந்து தனது பெற்றோரிடம் கூறாமல் இருந்து வந்துள்ளார்.  சம்பவத்தன்று ஆடுகளை மேய்சலுக்காக தனிமையில் வந்த கனகவல்லியை, அடைந்தே தீரவேண்டும் என்று முடிவு செய்தார். பின்னர் அவரிடம் தொல்லை செய்யவே, சத்தம் போட்டுள்ளார். ஆனால் காமத்தின் உச்சத்திற்கே சென்ற பெரியசாமி, கனகவல்லியை பலவந்தமாக விரட்டி சென்றார். தனிமையில் சிக்கி கொண்ட கனகவல்லி, அங்கும் இங்கும் ஒடினார்.


ஆனால் பெரியசாமி விடாமல் துரத்தி சென்றார். அதன் பிறகு ஒடமுடியாமல் கீழே விழுந்த கனகவல்லியை, அடர்ந்த வனப்பகுதிக்கு தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் அவரை கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா, பெரியசாமி மட்டும் கொலை செய்தாரா அல்லது கூட்டாக கொலை செய்துள்ளார்களா என்பது குறித்து தொடர்ந்து பெரியசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றனர்.


TTV Dinakaran on OPS: ‛நியாயமாக பேசுபவர் ஓபிஎஸ்.,’ -டிடிவி தினகரன் புதிய குண்டு!