தமிழகத்தில் சாலை இடங்களில் போடப்படும் சாலை என்பது மிகவும் தரமற்றதாகவும், உரிய முறையிலும் போடாமல் எந்தவகையில் லாபம் பெறலாம் என்ற ஒற்றை இலக்குடன் பல ஒப்பந்ததாரர்கள் செய்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. போடப்பட்டும் சாலையின் தரத்தை ஆய்வு செய்ய அதிகாரிகள் இருந்தும் அவர்களுக்கு என்று ஒரு தொகையினை கமிஷனாக பெற்று கொண்டு அவர்களும் சாலையின் தரத்தை குறித்து ஆய்வு மேற்கொள்வது கிடையாது. இது போன்ற ஒரு சம்பவம்தான் தற்போது சீர்காழியில் நடைபெற்றுள்ளது.




மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இவற்றில் பல்வேறு சாலைகள் பல ஆண்டுகளாக மிகவும் சேதமடைந்து உள்ளன. இதனை சரி செய்ய வேண்டி பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்து அதன் பலனாக பல ஆண்டுகள் கழித்து தற்போது சீர்காழி நகர்புரத்தில் சுமார் 1 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பில் 37 சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்று சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் முக்கிய சாலையான ஸ்டேட் பேங்க் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. 


13 years of Raavanan: தர்மம் காக்கும் ராவணன்... 13 ஆண்டுகளை நிறைவு செய்த மணிரத்னத்தின் ’ராவணன்’!




சாலை அமைப்பது குறித்து விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்காமலும், பழைய சாலைகள் அகற்றப்படமாலும், அதன் மீது புதிய தார் சாலை தரமற்ற முறையில் அமைப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், புதிய சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதுடன், ரோடு போடுறியா இல்லை கருப்பு பெயிண்ட் அடிக்கிறியா என பணியை மேற்கொண்டவர்களிடம் விளக்கம் கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியில் சாலை போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள், காவல் ஆய்வாளர் சிவகுமார், மற்றும் அதிகாரிகள் அங்கிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து சாலை போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 


Arvind Kejriwal: டெல்லி மக்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள் - ஆர்.கே. நகர் சம்பவம் குறித்து முதலமைச்சர் கெஜ்ரிவால் கருத்து!


மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :


Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற