Haryana: பாடலுக்காக பயணம்.. உள்ளாடையுடன் சடலமாக மீட்கப்பட்ட பாடகி! வன்புணர்வா?? இருவர் கைது!

ஹரியானாவைச் சேர்ந்தவரும், டெல்லியில் வசித்து வந்தவருமான பாடகியை அவரது குடும்பத்தினர் இறுதியாக ஜூன் 11ஆம் தேதி சந்தித்துள்ளனர்.

Continues below advertisement

ஹரியானாவைச் சேர்ந்த பிரபல பாடகி கடந்த 12 நாள்களாக காணாமல் போயிருந்த நிலையில், நேற்று அவரது உடல் புதைக்கப்பட்ட கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

2 வாரங்களுக்கு பின் மீட்கப்பட்ட உடல்

ஹரியானாவைச் சேர்ந்தவரும், டெல்லியில் வசித்து வந்தவருமான பாடகியை அவரது குடும்பத்தினர் இறுதியாக ஜூன் 11ஆம் தேதி சந்தித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது சுமார் இரண்டு வார காலத்துக்குப் பிறகு அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முன்னதாக பாடகியின் குடும்பத்தார் காவல் நிலையத்தில் கடத்தல் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க:தற்கொலை செய்துகொள்ள போவதாக கணவன்.. தகராறில் கணவரைக் கொன்ற பெண் கைது..

நண்பர்கள் மீது சந்தேகம்...

காணாமல் போவதற்கு முன், பாடகி தன்னுடன் பணிபுரிந்த ரோஹித் என்பவருடன் பாடல் ஒன்றின் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்த நிலையில்,  பாடகியின் குடும்பத்தார் ரோஹித் மீதும், அவருடன் பணிபுரிந்த ரவி என்பவரின் மீதும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாடகி சந்தேகத்துக்குரிய நபர்களுடன் இறுதியாக உணவருந்து வீடியோக்களும் தற்போது கிடைத்துள்ளன.

 இந்நிலையில், பாடகியின் உடல் உள்ளாடைகளுடன் மீட்கப்பட்டதாகவும், இந்த வழக்கை காவல் துறையினர் வேண்டுமென்றே இழுத்தடிப்பதாகவும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: விழுப்புரம் : மீண்டும் ஒரு ஜெய்பீம் பாணி வழக்கு : பொய் வழக்கு பதிவுசெய்த காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

போலீஸ் விசாரணை தீவிரம்...

இந்நிலையில் இது குறித்து பேசிய ஹரியானா மாநிலம், மெஹம் பகுதி காவல் துறையினர், ஒரு நாள் முன்பு தான் தங்களுக்கு பைனி கிராமத்தில் உள்ள மேம்பாலம் அருகே உடல் ஒன்று புதைக்கப்பட்டிருந்ததாகத் தகவல் கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து அவ்வுடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பியதில் அது காணாமல் போன பாடகியின் உடல் என்று தாங்கள் உறுதி செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவ்வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருவதாகவும், பாடகியின் உடல் உள்ளாடைகளுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் தாங்கள் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

Continues below advertisement
Sponsored Links by Taboola