சென்னை புழல் அருகே மோட்டார் வாகனத்தில் சென்ற இளைஞனை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


சரமாரியாக வெட்டிக்கொலை:


சென்னை புழல் அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சுதாசந்தர். அவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் அவர் மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வெட்டி கொலை செய்தனர். தகவல் அறிந்த கொளத்தூர் காவல் துணை ஆணையர் ராஜராம், உதவி ஆணையர் ஆதிமூலம், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


கொலை சம்பவத்தின் போது அவருடன் சென்ற பெண்ணை காவல் துறையினர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அந்த பெண் ராகவி (19) என்றும், 2 ஆண்டுகளுக்கு முன் அவர் ஆவடி பகுதியில் வசித்து வந்த போது சுதாசந்தருடன் காதல் வயப்பட்டதாகவும் தெரிய வந்தது. 


முன்னாள் காதலன்:


இதனை அறிந்த ராகவியின் பெற்றோர் உடனடியாக சொந்தத்தில் வசந்த் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ராகவி வசந்த் தம்பதியினருக்கு 2 மாத பெண் குழந்தை உள்ளது. ராகவியின் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முன்னாள் காதலனான சுதாசந்தருடன் வாழ முடிவு செய்துள்ளார். 


அதன்படி 2 மாதங்களுக்கு முன் ராகவி தனது 2 மாத கைக்குழந்தையுடன் வெளியேறி, சதாசந்தருடன் புழலில் இருக்கும் லட்சுமிபுரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். தனது மனைவி குழந்தையை அபகரித்து வாழ்ந்து வந்த சுதாசந்தர் மீது ஆத்திரமடைந்த வசந்த் அவர்களை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்கு வசந்த் உறவினர்களும் உறுதுணையாக இருந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. வசந்த் மற்றும் உறவினர்கள் நேற்று முன் தினம் 5 பேர் கொண்ட கும்பல் வைத்து சுதாசந்தரை கொலை செய்தனர். 


போலீஸ் விசாரணை:


கொலை குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கொலையாளிகள் வந்த ஆட்டோ ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்து வருகின்றனர். 


Shanti Bhushan Dies: இந்திராகாந்திக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்ற சாந்தி பூஷண் காலமானார்..! யார் இவர்..?


Jharkhand: பற்றிய தீ: பறந்த 40 தீயணைப்பு வாகனங்கள்! குழந்தைகள், பெண்கள் உட்பட 14 பேர் உடல் கருகி பலி!


Atlee Priya Baby: ”எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு” .. மகிழ்ச்சியில் அட்லீ - ப்ரியா ஜோடி.. குவியும் வாழ்த்துகள்..