சீர்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் பயன்பாடு அற்ற  கழிவறை தொட்டியில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக தஞ்சாவூர் தடவியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.


விழுப்புரம் - நாகை நான்கு வழி சாலை விரிவாக்கம் 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பாகசாலை காவல் எல்லைக்குட்பட்ட செம்பதனிருப்பு கிராமம் உள்ளது. இங்கு விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழி சாலை விரிவாக்க பணிக்க முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேசவன் என்பவரது வீடு கடந்த சில ஆண்களுக்கு முன்பு இடிக்கப்பட்டு, அதன் அருகிலேயே புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது. ஆனால், பழைய வீட்டின் கழிவறை தொட்டி அகற்றப்படவில்லை புதியதாக கட்டப்பட்டு வரும் வீடு பழைய கழிவறை தொட்டிக்கு அருகாமையில் அமைந்துள்ளது.


Maharaja Trailer: ரத்தம் சொட்ட சொட்ட நிற்கும் விஜய்சேதுபதி.. மகாராஜா படத்தின் ட்ரெய்லர் அப்டேட் இதோ!




கழிவறை தொட்டியில் கிடந்த மனித எலும்புகள் 


இந்நிலையில் கேசவன் வீட்டின் அருகே சிறுவர்கள் நேற்று மாலை கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அப்போது கிரிக்கெட் பந்து கேசவன் வீட்டு வளாகத்தில் விழுந்து உள்ளது. அப்போது கழிவறை தொட்டியில் மேல் மூடி திறந்திட்டு கிடந்த நிலையில் பந்தை எடுக்க சென்ற சிறுவர்கள் தொட்டியின் உள்ளே பார்த்தபோது மனித எலும்புக்கூடுகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து சிறுவர் தங்கள் பெற்றோரிடம் அதனை தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து உடனடியாக அவர்கள்  வீட்டின் உரிமையாளர் மற்றும்  பாகசாலை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். 




காவல்துறையினர் விசாரணை 


தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரனையில் எலும்புக் கூட்டின் அருகே புடவை, ஜாக்கெட் உள்ளிட்டவை கிடந்துள்ளதை வைத்து கழிவுநீர் தொட்டியில் கிடப்பது மனித பெண் எலும்புக்கூடு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தடவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு பிறகு இறப்பிற்கான காரணம் என்ன என்பது தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்தனர். வீட்டின் கழிவறை தொட்டியில் மனித எழும்புக்கூட கிடந்த சம்பவம் அப்பகுதி மற்றும் இன்றி மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.


நுழைவுத் தேர்வு ஏதுமில்லை: வேளாண், மீன்வளப் படிப்புகளுக்கு ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?




தடயவியல் நிபுணர் ஆய்வு


இந்நிலையில், தஞ்சாவூர் தடய அறிவியல் ஆய்வக அறிவியல் அலுவலர் ஜமீல் அகமது தலமையிலான குழுவினர்  அப்பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். உரிய ஆய்வு மேற்கொள்வதற்காக அங்கிருந்த எலும்புகளை சேகரித்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் டிஎன்ஏ பரிசோதனைக்கான சென்னை அனுப்பப்படவுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே கேசவனின் 65 வயதான தாயார்  மணிக்கொடி என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காணவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே காணாமல்போன மணிக்கொடியின் எலும்புக் கூடா? அல்லது வேறு எதேனும் பெண்ண கொலை செய்து சடலத்தை இங்கு கொண்டு வந்து போட்டனரா? என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மணிக்கொடி காணாமல் போனது தொடர்பாக கேசவன் காவல்நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.