புது டெல்லியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியின் மாணவி ஒருவர் இரண்டு மாணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இது குறித்து டெல்லி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 


மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் (Kendriya Vidyalaya) ஒன்றில் 11 வயது மாணவியை பள்ளியின் கழிவறையில் இரண்டு சீனியர் மாணவர்கள், பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, பள்ளி நிர்வாகம் காவல் துறையில் எவ்வித புகாரும் அளிக்கவில்லை என்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி மகளிர் உரிமை ஆணையம் Delhi Commission for Women (DCW) காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததும் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நடந்த சம்பவத்திற்கு இப்போதுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். அதற்கு அவர் மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
 
டெல்லி மகளிர் உரிமை ஆணையம் கடந்த செவ்வாய் கிழமை போலீசாரிடம் புகார் அளித்ததையெடுத்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விசயம் குறித்து பாதிக்கப்பட்டவர் பள்ளி முதவரிடம் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


வழக்கு விவரம்:


டெல்லி மகளிர் உரிமை ஆணையம் அளித்த புகாரின்படி, 11 -ஆம் வகுப்பு மாணவிக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் இருவருக்கும் இடையே சின்ன தகராறு ஏற்பட்டுள்ளது. வகுப்பறையை கடக்கும்போது, ஏற்பட்ட இந்த தகராறில் மாணவியிடம் இருவரும் மன்னிப்பு கேட்டுள்ளனர். ஆனால், இரண்டு மாணவர்களும் எரிச்சல் அடைந்து மாணவியிடம் வம்பு இழுத்துள்ளார். மாணவியை இருவரும் அருகில் இருந்த கழிவறைக்குள் இழுத்துச் சென்று உள்ளே தாழ்பாழ் போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பாலியல் பலாத்காரம் குறித்து மாணவி  ஆசிரியரிடம் கூறியதற்க் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இது குறித்து டெல்லி மகளிர் உரிமை ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் (Swati Maliwal) கூறுகையில், டெல்லியில் உள்ள பள்ளியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. நாட்டின் தலைநகரில் உள்ள பள்ளிகளே மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் இருப்பது வேதனையளிக்கிறது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


இது தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்தை போலீசார் வலியுறுத்தி உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 


மேலும் வாசிக்க..


Bigg Boss 6 Contestant List : போடு வெடிய..! இதோ பிக்பாஸ் போட்டியாளர் லிஸ்ட்..! வெளியான முழு விவரம்


‛வீடு ரெடி..வீரர்கள் ரெடி.. வேட்டையாட நீங்க ரெடியா?’ கர்ஜிக்கும் பிக்பாஸ் கமல்!


Watch Video: மயிலாப்பூர் மார்க்கெட்டில் காய்கறி வாங்கிய நிர்மலா சீதாராமன்..! வைரலாகும் வீடியோ..