டெல்லியில் கணவரை, அவரது மனைவியும் அவரது மகனும் கொன்று, அவரின் உடலைத் துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.


டெல்லியின் கிழக்கு பகுதியில் உடல் பாகங்கள் வெட்டப்பட்டு கொலை நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் காவல்துறைக்கு கிடைத்துள்ளது. கணவரை, அவரது மனைவியும் அவரது மகனும் கொன்று, அவரின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, பின்னர் கிழக்கு டெல்லியில் பல்வேறு இடங்களில் அவற்றை அப்புறப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. டெல்லி காவல்துறை குற்றப் பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கடந்த ஜூன் மாதம், பாண்டவ் நகரில் வெட்டப்பட்ட உடல் பாகங்களை போலீசார் முதலில் கண்டெடுத்தனர். ஆனால், அவை சிதைந்த நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை. ஷ்ரத்தா கொலை வழக்கின் கொடூர தகவல்கள் வெளிவரத் தொடங்கிய பிறகு, அடையாளம் தெரியாத உடல் உறுப்புகள் அவருடையதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது.


ஆனால், தற்போது அவை பாண்டவ் நகரில் வசிக்கும் அஞ்சன் தாஸ் என்பவருக்கு சொந்தமானது என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். திருமணம் தாண்டிய உறவில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, பூனம் மற்றும் அவரது மகன் தீபக் ஆகியோர் சேர்ந்து கணவரை கடந்த ஜூன் மாதம் கொலை செய்துள்ளனர்.


கொலை செய்யப்பட்டுள்ள கணவர், திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதில், கோபமடைந்த பெண், மகனுடன் சேர்ந்து தனது கணவரை 22 பாகங்களாக வெட்டி கொலை செய்துள்ளார். பாதிக்கப்பட்டவருக்கு முதலில் தூக்க மாத்திரை கொடுக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார். பின்னர், அவரது உடலை வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்து பாண்டவ் நகர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்புறப்படுத்தி உள்ளனர். 


இந்நிலையில் அக்கம் பக்கத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் இருந்து அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இரவில் தனது கையில் பையுடன் தீபக் நடந்து செல்வது அதில் பதிவாகியுள்ளது. அதில், தீபக் ஒரு இடத்தில் வெட்டப்பட்ட அந்த நபரின் தலை பாகங்களை ஒரு பிளாஸ்டிக் பையில் கட்டி எடுத்துச் செல்லும் காட்சி தற்போது வெளியாகி உள்ளது.  இதுவரை 10 தூண்டுகளை போலீசார் மீட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்று முன்னதாக வெளியான சிசிடிவி காட்சியில் இரவில் தனது கையில் பையுடன் தீபக் நடந்து செல்வது அதில் பதிவாகியுள்ளது. அவரது தாயார் பூனம் அவரைப் பின்தொடர்கிறார். அவர்கள் உடல் பாகங்களை அப்புறப்படுத்துவதற்காக இடத்தை தேடி அலைவது பதிவாகியுள்ளது.




மேலும் படிக்க


Tirumala Express Fire : திருப்பதியில் திருமலா விரைவு ரயிலில் தீ விபத்து...மக்களுக்கு என்ன ஆச்சு? நடந்தது என்ன?


Crime : பெண்கள் பாத்ரூமில் ரகசிய துளை; வெளுத்துவாங்கிய பொதுமக்கள்.. சென்னையில் பகீர் சம்பவம்..