சென்னை, ஓட்டேரிப் பகுதியில் உள்ளது வாழையம்மா நகர். இந்த பகுதியில் வசித்து வருபவர் பிரதீப்.  43 வயதான இவர் கூலித்தொழிலாளியாக உள்ளார். இவருக்கு ப்ரீத்தா (41) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். பிரதீப்பிற்கு மது பழக்கம் இருந்து வந்துள்ளது. இதையடுத்து, அடிக்கடி மது போதையில் மனைவி உள்பட வீட்டில் இருப்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.


இந்த நிலையில், பிரதீப் நேற்றும் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவர் வீட்டில் இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், தன்னுடைய 20 வயதான மகளிடமே தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். அப்போது, இதைக்கண்ட ப்ரீத்தா அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே, தனது மகளை காப்பாற்றுவதற்காக தனது கணவனை தடுத்துள்ளார்.




ஆனாலும், பிரதீப் தனது மகளிடம் தொடர்ந்து தவறாக நடக்க முயற்சித்துள்ளார். அப்போது, தனது மகளை காப்பாற்றுவதற்கு வேறு வழி தெரியாத தாய் ப்ரீத்தா, வீட்டில் கிடந்த சுத்தியலை எடுத்து தனது கணவன் பிரதீப்பின் தலையில் தொடர்ந்து பலமாக தாக்கியுள்ளார். இதனால், ரத்த வெள்ளத்தில் பிரதீப் கீழே சரிந்துள்ளார். பின்னர், சம்பவ இடத்திலே  பிரதீப் உயிரிழந்துள்ளார்.


இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். அவர்கள் பிரதீப்பின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். ப்ரீத்தா, அவரது மகன் மற்றும் மகளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகளை காப்பாற்றுவதற்காகவே தனது கணவனை ப்ரீத்தா சுத்தியலால் அடித்துக் கொலை செய்ததால், தற்காப்புக்காகவே இந்த கொலை நடைபெற்றதாக கூறி அவரை விடுவிக்க காவல்துறை முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.




மதுபோதையில் பெற்ற மகளிடமே தந்தை தகாத முறையில் நடக்க முயன்றதும், மகளை காப்பாற்றுவதற்காக கணவனை மனைவியே அடித்துக் கொன்றுள்ளதும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க : Madurai | மகனை அடித்துக் கொன்று சத்தமில்லாமல் சைக்கிளில் எடுத்துச் சென்ற பெற்றோர்! சிக்கவைத்த சிசிடிவி!


மேலும் படிக்க : பப்ஜி அடிமை! ஒட்டுமொத்த குடும்பத்தையும் சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண