காவிரிகடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. மாவட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாத நிலை, பருவம் தவறி பெய்யும் மழை, நிலத்தடி நீர் பற்றாக்குறை என பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் இம் மாவட்ட விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு இயல்பை விட கூடுதலாக பருவமழை பெய்ததால் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அதிக அளவில் பாதிப்படைந்த சூழலில் சம்பா அறுவடைக்கு பின்பு உளுந்து, பயிறு அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். 




Watch Video: திடீரென மயங்கி விழுந்த சீமான்.. விரைந்து வந்த 108! செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு!


ஜனவரி மாத இறுதியில் விதைப்பு செய்யப்பட்ட உளுந்து, பயிறு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் பெண் தொழிலாளர்களை வைத்து உளுந்து, பயிறு செடிகள் அறுவடை செய்யப்பட்டு மகசூல் எடுப்பது வழக்கம். ஆனால், தற்போது கூலி ஆட்கள் பற்றாக்குறையாலும், சம்பள உயர்வால் பல இடங்களில் நெல் அறுவடை போன்றே உளுந்து, பயிறும் இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டள்ளனர். 




CUET: கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?


மயிலாடுதுறை அருகே குத்தாலம் தாலுக்கா செங்குடி கிராமத்தில் அறுவடை இயந்திரம் மூலம் பயிறு செடிகள் அறுவடை செய்யும் பணிகள் விவசாயிகள் முழுவீச்சில் செய்து வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில் நெல் அறுவடை செய்யக்கூடிய இயந்திரத்தை சல்லடையை மாற்றி உளுந்து, பயிறு அறுவடை செய்யப்படுகிறது. ஆனால் உளுந்து, பயிறு முழுமையாக வராமல் உடைந்து பருப்பாக கொஞ்சம் வரத்தான் செய்கிறது.




Watch Video: டோல் பாஜே!! ஜிமிக்கி கம்மலை ஓரம்கட்டிய மாவட்ட ஆட்சியரின் டான்ஸ்! கேரளாவின் வைரல் வீடியோ!


அதனால் இழப்பு ஏற்பட்டாலும் ஆட்கள் தட்டுப்பாட்டாலும், சம்பளத்தை கணக்கீடு செய்யும் போது பயிறு உடைந்து பருப்பாக வருவதில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படவில்லை. இருப்பினும் வரும் காலங்களில் உளுந்து, பயிறு உடையாமல் அறுவடை செய்யும் வகையில் நவீன இயந்திரங்களை வேளாண்மைத்துறை மூலம் டெல்டா மாவட்ட பகுதிகளுக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.


Watch Video : டெல்லி போனாலும் தொடரும் வாக்கிங்!! நடு நடுவே செல்ஃபி.. நேரு பார்க்கில் முதல்வரின் நடைபயிற்சி!