ஒரு முறை பயன்படுத்திய பின் எண்ணெய்யை நன்றாக குளிர்விக்க வேண்டும்.

பின் அதை வடிகட்டி அதில் எந்த உணவு பொருள்களும் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

அதை ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளலாம்.

தாளிப்பதற்கு, தோசை,சப்பாத்தி செய்வதற்கு இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

முடிந்த வரை ஒரு வாரத்தில் அனைத்து எண்ணெய்யையும் திருத்துவிட வேண்டும்.

எண்ணெயில் ஏதும் வாடை வராமலும், கலர் மாறாமலும் இருக்கும் வரை பயன்படுத்துவது நல்லது.

முடிந்த வரை குறைந்த அளவு எண்ணெய்யை பயன்படுத்துவது நல்லது.

ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவது, உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கிறது.

இதனால், இதய நோய் வருவதற்கான ஆபத்துகள் அதிகம்.

எண்ணெய்யை பயன்படுத்துவதில் கவனம் தேவை.