“வெறுப்பை உமிழும் அளவுக்கு நான் என்ன செய்து விட்டேன்” என ராஷ்மிகா மந்தனா தன் வருத்தத்தை தெரிவித்துள்ளார்



நடிகை ராஷ்மிகா மந்தனா வருத்தத்துடன் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது



கன்னடத்தில் 'கிரிக் பார்ட்டி' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா



கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்



தற்போது முன்னணி நடிகரான விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார்



இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதில் சில விஷயங்கள் பற்றி பேசியுள்ளார்



நான் என் வாழ்க்கையைத் தொடங்கியதிலிருந்து நிறைய வெறுப்புகளை பெற்று வருகிறேன்



நிறைய ட்ரோல்களுக்கும் எதிர்மறைகளுக்கும் உண்மையில் பாதிக்கப்படுகிறேன்



இங்குள்ள ஒவ்வொரு நபராலும் நேசிக்கப்பட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.



நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அதற்கு பதிலாக எதிர்மறையை உமிழலாம் என்று அர்த்தமல்ல என்று பதிவிட்டுள்ளார்



சொல்லாத விஷயங்களுக்காக இணையத்தில் நான் கேலி செய்யப்படும்போதும் அது மனதளவில் நொறுங்கி வெளிப்படையாக மனதை தளர்த்துகிறது

உங்களை மகிழ்விப்பது - எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லோரும் அன்பாக இருங்கள்.! என பதிவிட்டுள்ளார்.