உடல் அசதி, சோர்வைத் தடுப்பதற்காக நிறைய தண்ணீர் குடியுங்கள். 8-10 டம்ளர் தண்ணீர் குடியுங்கள். மேலும், பழச்சாறு, மூலிகை தேநீர் குடித்தும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள்
புரதச்சத்து நிறைந்த உணவுகள் கட்டாயம் தேவை. பருப்பு, முட்டைகள், நட்ஸ் உள்ளிட்ட பொருட்களை உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம் ஆகும். கீரை, சிவப்பு இறைச்சி, பீன்ஸ் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
புதியதாக குழந்தை பெற்ற பெண்கள் கால்சியம் சத்துள்ள உணவுகள சாப்பிட வேண்டும். பால், கீரைகள், பாதாம் ஆகியவற்றில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. எலும்பு, பற்களை வலுப்படுத்தும்
குடைமிளகாய், ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில் வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இரும்புச்சத்தை தரும் ஆற்றல் வல்லது.
செரிமானத்தை சீர்செய்யவும், குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் புரோபயோடிக்குகள் அவசியம். தயிர் உள்ளிட்டவற்றில் புரோபயோடிக்குகள் உள்ளது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்க சமச்சீர் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். சில மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிடுங்கள்.
பிரசவத்திற்கு பின்பு உடல்நலம் தேறுவதற்கு நார்ச்சத்து மிகவும் அவசியம். பழங்கள், முழு தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்டவைகளை சீராக சாப்பிட வேண்டும்.
அதிகப்படியான காஃபின், பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது பிரசவத்திற்கு பின் இந்த உணவுகள் ஆரோக்கியமற்றது.