ஊர்த்துவ முக ஸ்வனாசனம் நன்மைகள்!

Published by: ஜான்சி ராணி

ஊர்த்து' என்றால் 'மேல் நோக்கி', முக என்றால் 'முகம், ஸ்வனா என்றால் 'நாய்' என்று அர்த்த மாகும்.

முதுகையும், தலையையும் பின்னோக்கி வளைத்து செய்யப்படும் ஆசனம் என்பதால், இதற்கு 'ஊர்த்துவ முக ஸ்வனாசனம்' என்று பெயர்.

யோகா விரிப்பில், குப்புறப்படுக்கவும். இப்போது கைகளை மார்புப் பகுதியின் பக்கவாட்டில் கொண்டு வந்து, உள்ளங்கைகளை தரையில் பதிக்கவும்.

கைகளில் முழு அழுத்தத்தையும் கொடுத்து, உடலை உயர்த்தி, முடிந்தவரை முதுகையும், தலையையும் பின்னோக்கி வளைக்கவும். இந்த நிலையில், பாதங் கள் மேல் நோக்கி பார்த்தபடி இருக்க வேண்டும்

காலில் அழுத்தம் கொடுத்து, தொடை மற்றும் முழங் கால் தரையில் பதியாதபடி சற்று உயர்த்தவும். இந்த நிலையில் 10 வினாடிகள் இருந்து மீண்டும் பழைய நிலைக்கு வரலாம்.

இந்தப் பயிற்சியை 5 முறை செய்யலாம். தீவிர முதுகு வலி, எலும்பு முறிவு,காயம் உள்ள வர்கள் இந்த பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது.

மணிக்கட்டுகள், தோள்பட்டை, கணுக்கால் பகுதி களை வலுப்படுத்தும். உடல் தசைகள் விரிவடைய உதவும். இடுப்புப்பகுதி மற்றும் கால் தசைகள் தளர்வடையும்.

உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, உடல் எடையைக் கட்டுப்படுத்தும்.

முதுகு மற்றும் இடுப்பு வலியை குணப்படுத்தும். உடலின் தோற்றத்தை மேம்படுத்தும்.