இஞ்சி உடலுக்கு மிகவும் நல்லது. இஞ்சியை தட்டி அதை தேநீரில் கலந்து பருகினால் உடலுக்கு மிகவும் நல்லது ஆகும்.
செம்பருத்தி ஏராளமான நன்மைகளை கொண்டது. அதன் இதழ்களில் ஏராளமான ஆரோக்கியம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது புதினா. அஜீரண கோளாறை சரிசெய்யும் வல்லமை கொண்டது புதினா.
சளி, இருமல் பிரச்சினைகளை நீக்கியும், உடலுக்கு ஏராளமான நன்மைகளையும் தருவது துளசி. இதன் இலைகளை தேநீரில் கலந்து பருகினால் மிகவும் நல்லது ஆகும்.
இலவங்கப்பட்டை நல்ல நறுமணம் மிக்கது. இது சுவாசக்கோளாறுகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது. இதை தேநீரில் கலந்து பருகுவது நன்மை ஆகும்.
சாமந்தி பூ மாதவிடாய் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வாக உள்ளது. பல மருத்துவ குணம் கொண்ட இதை தேநீரில் சேர்த்து பருகலாம்.
மஞ்சள் போன்ற மருத்துவ குணம் கொண்ட பொருள் எதுவும் இல்லை. சிறந்த மருத்துவ குணம் கொண்ட மஞ்சளை ஏதுவான அளவு கலந்து பருகினால் நோய் நம்மை நெருங்காது.
லாவண்டர் பூ கலந்து பருகும் தேநீர் லாவண்டர் டீ என்று அழைக்கப்படுகிறது. இதை தமிழில் இலவங்க தேநீர் என்றும் கூறுவார்கள். இது புத்துணர்ச்சியை அளிக்கும்.