இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இஞ்சி செரிமானத்திற்கு உதவும். இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட செரிமான பிரச்சனைகள் ஏற்படாது.
தலைசுற்றல் வாந்தி மயக்கம் பிரச்சனை இருந்தால் இஞ்சி சாறு குடித்துவர குணமாகலாம்.இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
இஞ்சியில் காம்ஃபின், ஜின்ஜிபெரி, ஃபெளலாட்ரின் ஆகியவை உள்ளதால் இது புத்துணர்ச்சி அளிக்கும். இதோடு புதினா சேர்த்து டீ அருந்தாலாம். உடலுக்கு தெம்பு கிடைக்கும்.
இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு உணர்வு ஏற்படும்.
இதய ஆரோக்கியத்திற்கு இஞ்சி மிகவும் நல்லது. இதயதுக்கு ரத்தத்தை ஒழுங்காக அனுப்ப உதவுகிறது.
ஒரு துண்டு இஞ்சி, சிறிதளவு ஃப்ரெஷ் மஞ்சள் இரண்டையும் தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து வடிக்கட்டி தேன், எலுமிச்சை சாறு சேர்த்து அருந்துவது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.வாரத்தில் இரண்டு நாட்கள் இஞ்சி துவையல் செய்து சாப்பிடலாம்.
இஞ்சியை நன்றாக சுத்தம் செய்து தோல் நீக்கவும். நன்றாக துருவி எடுத்துகொள்ளவும். துருவி எடுத்த இஞ்சியை தேனில் ஊறவைத்து தினமும் ஒரு வேளை ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்
இஞ்சி செரிமானத்திற்கு உதவுவதால் பசியை தூண்டும். பசி எடுக்கவில்லை என்பவர்கள் இஞ்சி சாறு குடித்து வர சரியாகும்.