மேனி பொன் போல் ஜொலிக்க இந்த 4 பொருட்கள் போதும்!

Published by: விஜய் ராஜேந்திரன்

ஒவ்வொரு பெண்ணும் தன் சருமம் களங்கமற்றதாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள்

சந்தையில் கிடைக்கும் கிரீம்கள் மற்றும் அழகு சிகிச்சைகள் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்

வீட்டு உபயோகப் பொருட்களால் சருமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது

தினமும் குளிப்பதற்கு முன் மஞ்சள் மற்றும் உளுந்து மாவை முகத்தில் தடவவும்

10 முதல் 15 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் முகத்தை நன்கு கழுவுங்கள். இதனால் சருமம் பளபளக்கும்

வெள்ளரி சாறு சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் தண்ணீர் அதிகம் இருப்பதால், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்

வெள்ளரிக்காயை அரைத்து அதன் சாறை முகத்தில் தடவலாம். குளிப்பதற்கு முன் தோலில் சிறிது நேரம் தடவவலாம்

தினமும் குளிப்பதற்கு முன் 2 ஸ்பூன் முல்தானி மிட்டியுடன் ரோஸ் வாட்டரை கலந்து தடவலாம்

சந்தனத்திற்கு குளிர்ச்சித் தன்மை உண்டு. இதன் பேஸ்ட்டை முகத்தில் தடவினால் எரிச்சல் மற்றும் சிவத்தல் குறையும்

2 ஸ்பூன் சந்தனப் பொடியை எடுத்து, பின்னர் அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட்டை தயார் செய்து தடவலாம்