உன்னோடு வாழ்வதே
ஆனந்தமே ஒவ்வொரு
பொழுதிலும் பேரின்பமே
தீராத தேவைகள் ஆனந்தமே



ஆனந்தமே..! எல்லைகள்
இங்கு இல்லை..!



காதலாட காதலாட
காத்திருந்தேனே....!
ஆசை நூலில்
பாசம் பூக்கள் கோர்த்திருந்தேனே....!



செய்யாத மாதவம் நீயே...!
பொய்யாத பேரருள் நீயே...!



ஓயாத
தேன்மழை... அதை ஏந்தவே
புது பூமி செய்வோமே...!



உன்னோடு வாழ்வதே
ஆனந்தமே ஒவ்வொரு
பொழுதிலும் பேரின்பமே



தீராத தேவைகள் ஆனந்தமே...!
ஆனந்தமே இங்கு பேரின்பமே...!



நீல வானம்
மாய்ந்த போதும்..
நீ இருப்பாயே
தேவகானம் தூய
மெளனம் நீ கொடுப்பாயே..!



ஆலகால
நஞ்சு பாய்ந்தது மெல்ல
மீள்வோமே...!



தெய்வம் மண்ணில்
தோன்றிட வாழ்வு நீள்வோமே...!