இந்திய அரசியலமைப்பின் 356-வது பிரிவு இதுவரை 134 முறை இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தான் ஜனாதிபதி ஆட்சி பெரும்பான்மையாக அமல்படுத்தப்பட்டது.
தற்போதும்(கடந்த வியாழன் கிழமை i,e., 13/02/2025) மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சிதான் நடக்கிறது.
மணிப்பூரில் இதோடு 11 முறையும் உத்தரப்பிரதேசத்தில் 10 முறையும் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர், புதுச்சேரி, பஞ்சாப் ஆகிய மூன்று மாநிலங்களும் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் அதிக காலமாக இருந்தது.
1950 முதல், ஜம்மு-காஷ்மீரில் 9 முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
மேலும், இந்திய அரசியலமைப்புச்சட்டம் அமல்படுத்தியதில் இருந்து ஜம்மு-காஷ்மீர் 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனாதிபதி ஆட்சியில் கீழ் உள்ளது.
அதற்கு பிறகு பஞ்சாப் - 10 ஆண்டுகள், புதுச்சேரி - 7 ஆண்டுகள் ஜனாதிபதி ஆட்சியில் இருக்கிறது.
சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் பல மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட போதிலும், இரண்டு மாநிலங்களில் மட்டும் விதிவிலக்காக இருக்கிறது.
தெலுங்கானா மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் தான் இதுவரை ஒரு முறை கூட ஜனாதிபதி ஆட்சி வந்ததில்லை.