மொரீஷியஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி!
கிழக்கு ஆப்ரிக்க நாடான மொரீஷியஸ் நாட்டின் தேசிய தினம் மற்றும் சுதந்திர தினத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார்.
மொரீஷியஸ் பிரதமர் நவின் ராமகூலம் மற்றும் பிரதமர் மோடி சந்தித்து பேசினர். பின்னர் இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
மொரீஷியஸின் தேசிய தின விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
”மொரீஷியஸின் பொருளாதாரத்தின் பாதுகாப்பைப் பராமரிப்பதில் நாங்கள் ஒத்துழைக்க உறுதிபூண்டுள்ளோம். கடலோரக் காவல்படையினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நாங்கள் ஒத்துழைப்போம்” என்று மோடி பேசினார்.
மொரீஷியஸ் நாட்டின் மிக உயரிய, 'த கிராண்ட் கமாண்டர் ஆப் த ஆர்டர் ஆப் த ஸ்டார் அண்ட் கீ ஆப் த இந்தியன் ஓஷன்' என்ற விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. அந்நாட்டின் பிரதமர் நவின் ராமகூலம் வழங்கினார்.
இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார்.
கடல்சார் பாதுகாப்பு, தேசிய நாணயங்களில் வர்த்தகம், திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வழங்க 8 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.