'வன்தாரா' - வன உயிரிகள் காப்பகம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
குஜராத் ஜாம் நகரில் அமைக்கப்பட்டுள்ள ’வந்தரா’ வன விலங்குகள் மீட்பு, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் பவுண்டேசன் சார்பில் ஆனந்த் அம்பானி வன உயிரிகளுக்கான பாதுகாப்பு மையத்தை அமைத்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி, அவர்களது மகன் ஆனந்த் அம்பானி மற்றும் மருமகள் ராதிகா ஆகியோரும் பங்கேற்றனர். சிங்க குட்டிகள், ஒட்டகச் சிவிங்கி உள்ளிட்டவற்றிக்கு பிரதமர் மோடி உணவளித்தார்.
ன்தாராவில் உள்ள வனவிலங்கு மருத்துவமனை, எம்.ஆர்.ஐ (MRI), சி.டி (CT) மற்றும் ஐ.சி.யு., (ICU) உள்ளிட்ட வசதிகளை பார்வையிட்டார். கால்நடை மருத்துவர்கள், நர்ஸ்கள் ஆகியோருடன் பிரதமர் கலந்துரையாடினார்.
வன்தாரா மையம், ஜாம்நகர் ரிலையன்ஸ் சுத்திகரிப்பு மைய வளாகத்தில் 3 ஆயிரம் ஏக்கரில் அமைந்துள்ளது.
43 வகை உயிரினங்களில், 2 ஆயிரம் வன விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. இயற்கையான வன விலங்குகள் வாழிடம் போன்று இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனந்த் அம்பானியின் கனவு திட்டமான 'வன்தாரா'வில், வன உயிரியல் நிபுணர்கள் உட்பட 2,100 பேர் பணியாற்றுகின்றனர்.
வன உயிரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.