குளிர்காலத்தில் பொதுவாக பலருக்கும் சளி பிடிக்கும். அந்த காலத்திலே சளி, இருமல் காரணமாக தும்மலால் பலரும் அவதிப்படுவார்கள்.
ஒவ்வாமை, காற்று மாசுபாடு, வெப்பநிலை மாற்றம் ஆகியவை காரணமாகவும் தும்மல் ஏற்படலாம்.
அடிக்கடி தும்மல் வருவதால் நம் வேலை, நமது உடன் இருப்பவர்களுக்கு மத்தியில் நம்மை அசெளகரியமாக உணரச் செய்யும்.
தும்மல் தொல்லையை வீட்டு வைத்தியம் மூலமாகவே சரி செய்துிவிடலாம்.
தூங்குவதற்கு முன்பு அரை ஸ்பூன் மஞ்சளை சூடான பாலில் குடித்தால் தும்மலை கட்டுப்படுத்தலாம்.
அழற்சி எதிர்ப்பு பண்புகள், வெப்பமூட்டும் பண்புகள் கொண்ட இஞ்சியின் சாறு குடிப்பதால் அடிக்கடி தும்மல் வருவது தடுக்கப்படுகிறது.
துளசியில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அபாரமானது. தினமும் 4-5 துளசி இலையை மென்று சாப்பிட்டு வந்தால் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி பிரச்சினைக்கு தீர்வாகும்.
ஒரு ஸ்பூன் ஓம விதையை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து இந்த ஓம வாட்டரை குடித்தால் தும்மலுக்கு நிவாரணம் கிடைக்கும்.
இஞ்சியை அரைத்து அரை ஸ்பூன் வெல்லத்தை கலந்து தினமும் 2 ஸ்பூன் குடித்து வந்தால் தும்மலில் இருந்து நிவாரணம் பெறலாம்.
ஒரு தேக்கரண்டி தேன், அரை தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள் கலந்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடித்தால் தும்மலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.