கோடையில் திராட்சை தண்ணீர் குடிப்பது ஏன் நல்லது?
உலர் திராட்சையில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இவை இரண்டும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்
உலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வயிறு உப்புதல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும்.
நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் இருந்தால், திராட்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுங்கள்.
உலர் திராட்சை கலந்த நீரை அருந்தினால் மாசு, பதப்படுத்தப்பட்ட உணவு, மன அழுத்தம் ஆகியனவற்றின் காரணத்தால் ஏற்பட்ட உடல் நச்சை நீக்கும்.
நன்றாக ஊற வைத்த உலர் திராட்சைகள் டயட் இருக்கும்போது ஏற்படும் ஃபுட் கிரேவிங்ஸைத் தடுக்கும். உங்கள் உணவில் உள்ள கலோரிக்களின் அளவைக் குறைக்கும்.
இரும்புச் சத்துக் குறைபாட்டால் ரத்த சோகை ஏற்படும். குறிப்பாக பெண்களுக்கு அதிகமாக ஏற்படும். எனவே திராட்சை தண்ணீர் அருந்திவந்தால் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும்.
தயிர், உலர் திராட்சை என இரண்டிலும் கால்சியம் உள்ளது. இவற்றை இணைத்து சாப்பிடும்போது ஆஸ்டியோபோரோஸிஸ் நோய் வரும் அபாயம் உள்ளவர்களுக்கு அது தவிர்க்கப்படும்
ப்ரோபயாடிக், ப்ரீபயாடிக் என்ற இரண்டும் இணையும்போது அவை குடலில் உள்ள அழற்சியை நீக்கி நல்ல பாக்டீரியக்கள் வளரச் செய்யும்.