மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஆன ஹார்திக் பாண்ட்யா..!



024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது



டிசம்பர் 19-ஆம் தேதி அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் வீரர்களின் மினி ஏலமானது நடைபெற உள்ளது



மும்பை இந்தியன்ஸ் அணி, இதற்கு முன்னதாக தங்கள் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை அப்பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது



அந்த அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் நியமித்துள்ளது



முன்னதாக, குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி அண்மையில் வாங்கியிருந்தது



அதேபோல், பாண்டியா தலைமையில் குஜராத் அணி கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றிருந்தது



வரும் 5 ஆண்டுகளுக்கான அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை அந்த அணி நிர்வாகம் தேர்ந்தெடுத்துள்ளது



ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2013, 2015, 2017,2019, 2020 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது



மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் இந்த திடீர் அறிவிப்பால் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது