கோடையில் இளநீர் குடிப்பதற்கு முன் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

இளநீர் உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

அதில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பொட்டாசியம், மெக்னீசியம் தசைகளை வலுப்படுத்தும். இவை உடலில் pH அளவை பராமரிக்கின்றன.

உடலுக்கு தேவையான நீருக்காக வெறும் இளநீரை மட்டும் நம்பியிருப்பது சரியல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் உடலுக்கு 2 முதல் 3 லிட்டர் நல்ல தண்ணீர் தேவை.

இளநீர் அதிகமாக குடிக்காமல் ஒரு கிளாஸ் குடித்தால் போதும்.

அதிக காஃபீன் கொண்ட பானங்கள் தேநீர் காபி போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

உணவில் வெள்ளரிக்காய், தர்பூசணி போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கோடை காலத்தில் சாதாரண நீர் மற்றும் இளநீர் இரண்டையும் போதுமான அளவு உட்கொள்வது நல்லது.