கிச்சன் வேலையை சுலபமாக்கும் டிப்ஸ் - பாகம் : 6

Published by: பிரியதர்ஷினி

நாம் வீட்டிலேயே செய்த இஞ்சி பூண்டு விழுதில் ஒரு டீஸ்பூன் சூடான எண்ணெய் ஊற்றி வைத்தால் அது நீண்ட நாள் சுவையாகவும் Fresh ஆகவும் இருக்கும்

கீரை வதக்கும் பொழுது சிறிது சர்க்கரை சேர்த்துக் கொண்டால் கீரையின் பச்சை நிறம் அப்படியே இருக்கும்

ஆம்லெட் செய்கையில் வெங்காயத்தோடு 2 ஸ்பூன் தக்காளி சாறையும் சேர்த்து கலக்கி ஆம்லெட் போட்டால் சுவையாக இருக்கும், நீச்ச வாடையும் வராது

கொத்தமல்லி, கறிவேப்பிலை தழையை வாழைப்பட்டையில் சுற்றி வைத்தால் நீண்ட நாள் வாடாமல் இருக்கும்

மிக்சருக்கு அவல், கடலைப்பருப்பு, கார்ன் ஃப்ளேக்ஸை நேரடியாக எண்ணெயில் பொரித்தால் கருகும். அகலமான குழியுள்ள ஒரு சில்வர் சல்லடை வடிகட்டியில் போட்டு வடிகட்டியை அப்படியே சூடான எண்ணெயில் முக்கிப் பொரித்தால் கருகாமல் இருக்கும்

ஐஸ்கிரீம் பரிமாறும் கிண்ணங்களை ப்ரீசரில் 5 நிமிடங்கள் வைத்துவிட்டு பின்னர் ஐஸ்க்ரீம் நிரப்பிக் கொடுத்தால் நீண்ட நேரம் உருகாமல் இருக்கும்

துவரும் பருப்பு வேக வைக்கும் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை கலந்து வேகவைத்தால் சாம்பார் இரவு முழுவதும் ஊசி போகாமல் இருக்கும்

Noodles செய்யும்பொழுது, அதை சுடு தண்ணீரில் வேக வைத்த உடன் குளிர்ந்த நீரை ஊற்றி வைத்து விடுங்கள். Noodles ஒட்டாமல் இருக்கும்