கிச்சன் வேலையை சுலபமாக்கும் டிப்ஸ் - பாகம் : 14

Published by: பிரியதர்ஷினி

கொத்தமல்லி சட்னி அரைக்கும் போது, புளி சேர்ப்பதற்கு பதிலாக ஒரு துண்டு மாங்காய் சேர்த்து அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கு

வெண்டைக்காய் வத்தல் செய்யும் போது ஒரு டீஸ்பூன் புளித்த மோர் சேர்த்தால் வத்தல் சுவையாக இருக்கும்

பால் கெட்டு போகாமல் மற்றும் அடி பிடிக்காமல் இருக்க பால் காய்ச்சும் பாத்திரத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்

1 கப் கோதுமை மாவுக்கு, 1 ஸ்பூன் உருக்கிய வெண்ணெயும், தேவையான அளவு தண்ணீரும், விட்டு பிசைந்து சப்பாத்தி சுட்டால் சாப்டாக வரும்

பிரட் துண்டுகள் காய்ந்து போய்விட்டால், இட்லி பாத்திரத்தில் சேர்த்து அவித்து எடுத்தால் பிரட் பஞ்சு போல சாஃப்டாக மாறிவிடும்

நல்லெண்ணெயில் உளுந்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து, தேவையான அளவு தேங்காய், மிளகு சேர்த்து சட்னி அரைத்தால் சட்னியின் சுவை அற்புதமாக இருக்கும்

அவியலுக்கு மசாலா அரைக்கும் போது தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், ஊற வைத்த கசகசா அரைத்து அவியலில் சேர்தால் கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கும்

பொட்டுக்கடலையோடு வர மிளகாய், வருத்தப்பூண்டு, தேங்காய், பெருங்காயம், கல்லுப்பு சேர்த்து அரைத்தால் சுவையான பொட்டுக்கடலை பொடி தயார்