நிதிநிலை அறிக்கை தயாரிப்பின் இறுதி கட்டத்தைக் குறிக்கும் விதமாக அல்வா நிகழ்ச்சி நடைபெறும்

நிதிஅமைச்சகம் அமைந்துள்ள நார்த் பிளாக்கில் நிதி அமைச்சர் தலைமையில் இந்த விழா நடைபெறும்

நிதியமைச்சர் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு தன் கையால் அல்வாவை பகிர்ந்தளிப்பார்

பட்ஜெட் தயாரிப்புக்கு உழைத்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்க விழா நடைபெறுகிறது

நிதிநிலை அறிக்கை என்பது அரசின் மிக முக்கியமான ஆவணமாகும்

மக்களவையில் தாக்கல் செய்யபடுவதற்கு முன்புவரை அது, ரகசியமாக வைக்கப்படும்

விழா முடிந்தவுடன் அதிகாரிகள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை பூட்டிய அறைக்குள் வைக்கப்படுவர்

பட்ஜெட் அச்சகத்தில் அனைத்து அலுவலர்களும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை இருப்பார்கள்.

பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகுதான், அதிகாரிகளும், ஊழியர்களும் உறவினர்களை சந்திக்க முடியும்

அல்வா விழா என்பது பட்ஜெட் அச்சிடும் பணிகளை தொடக்கத்தை குறிப்பதாக அமைகிறது