பொன்னியின் செல்வன் நாயகி



இளவரசி நந்தினி



கர்நாடகாவில் பிறந்து உலக அழகிப் பட்டத்தை தன் 21ஆம் வயதில் கைப்பற்றிய ஐஸ்வர்யா ராய், தமிழ் சினிமாவில் தான் முதன்முதலில் அறிமுகமானார்.



இயக்குநர் மணிரத்னத்தின் இருவர் படம் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா ராயின் படங்கள் முதலில் இந்தியில் தோல்வியையே தழுவின.



தொடர்ந்து சங்கரின் ஜீன்ஸ் படம் மூலம் வெற்றிப்பட நாயகியாக உருவெடுத்த ஐஸ்வர்யா ராய்,



ஹம் தில் தே சுக்கே சனம், தேவ்தாஸ் என இந்தியிலும் மாஸ் காட்டி முக்கிய நடிகையாக உருவெடுத்தார்.



இந்தியில் மிகப்பெரும் நடிகையாக ஐஸ்வர்யா ராய் உருவெடுத்தபோதும், திருமணத்துக்குப் பின்னும் தொடர்ந்து கோலிவுட் சினிமாவுடனான பிணைப்பை மறக்காமல் தமிழில் நடித்து வருகிறார்.



தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வனில் நந்தினி எனும் முக்கியக் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் தற்போது நடித்துள்ளார்.



‘பொன்னியின் செல்வன்’ படம் வரும் செப்டெம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.



நந்தினியை திரையில் காணும் நாளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.