இந்திய அணிக்காக பேட்டிங்கில் மிரட்டிய சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரது அதிரடியால் இந்திய அணி 237 ரன்களை விளாசியது. இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது போட்டி அசாம் கவுஹாத்தியில் நடைபெற்று வருகிறது.






டாஸ் வென்ற தென்னாப்பிர்க்க அணி:


இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இந்திய அணி முதல் 7 ஓவர்களின் முடிவில்  விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் எடுத்திருந்தது.


கே.எல்.ராகுல் அரைசதம்:


இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 10வது ஓவரில் 43 ரன்கள் எடுத்திருந்த போது ரோகித் சர்மா விக்கெட்டை கேசவ் மகாராஜ் எடுத்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே.எல்.ராகுல் 24 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். முதல் போட்டியில் அரைசதம் கடந்திருந்த இவர் தொடர்ச்சியாக இந்தப் போட்டியிலும் அரைசதம் கடந்து அசத்தினார். 28 பந்துகளில் 4 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடித்திருந்த கே.எல்.ராகுல் 57 ரன்களில் கேசவ் மகாராஜ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.


18 பந்துகளில் அரைசதம்:


அடுத்த வந்த சூர்யகுமார் யாதவ் தொடக்க முதலே பவுண்டரிகள் விளாச தொடங்கினார். இதன்காரணமாக இந்திய அணி 15 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 18 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.


மேலும் குறைந்த டி20 போட்டியில் ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் எனும் சாதனையையும் சூர்யகுமார் படைத்தார்.




மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கோலி 17வது ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் விளாசினார். இதனால் ஆட்டத்தின் 18வது ஓவரில் இந்திய அணி 200 ரன்களை கடந்து அசத்தியது.


அதனை தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக்,  7 பந்துகளில் 2 சிக்சர்கள் மற்றும்  ஒரு பவுண்டரி அடித்து மொத்தமாக 17 ரன்கள் எடுத்தார். அதை தொடர்ந்து 28 பந்துகளில் 49 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விராட் கோலி ஆட்டமிழக்காமல் இருந்தார்.


இந்நிலையில், இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து வருகிறது 


மேலும் வாசிக்க: IND vs SA 2nd T20I LIVE: பேட்டிங்கில் மிரட்டிய இந்தியா..! தெ. ஆப்பிரிக்காவிற்கு 238 ரன்கள் டார்கெட்