தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தென்னாப்ரிக்காவுடனான ஒரு நாள் தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகம் அளிக்கிறது. அவருக்கு பதிலாக வேறு வீரர் களமிறக்கப்படுவாரா என்ற விவரத்தை பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை.


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோஹித் ஷர்மா காயம் காரணமாக விலகியதால், அகில இந்திய மூத்த தேர்வுக் குழு, ஒருநாள் தொடருக்கான கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டார். துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டார். மேலும், ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஷிகார் தவான், சாஹல் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டனர்.






மேலும் படிக்க: Siddharth Controversy | "என் மகள் இந்தியாவுக்காக மெடல்களை குவிச்சாங்க.. அவர் என்ன பண்ணார்?” - விளாசிய சாய்னா நேவாலின் தந்தை


அணியின் விவரம்:


கே.எல். ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்),  சாஹல், ரவிச்சந்திரன் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், பும்ரா (துணை கேப்டன்), புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்.


சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர், சிறப்பாக விளையாடி இருந்தார். அதனை அடுத்து தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஒரு தொடருக்கான அணியில் இடம் பிடித்திருந்தார். இந்நிலையில், வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஜனவரி 19-ம் தேதி நடக்கும் ஒரு நாள் போட்டியில் அவர் பங்கேற்பதில் சிக்கல் நிலவுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண