ஆஷாட நவராத்திரியின் 8-ம் நாளை முன்னிட்டு மயிலாடுதுறை துலா கட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மங்கள வாராஹி அம்மனுக்கு வெண்ணை அலங்காரம் செய்யப்பட்டு, சகஸ்ரநாம அர்ச்சனை செய்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.


வாராஹி வழிபாடு 


நீங்காத துன்பத்தில் வரும் பக்தர்களின் தடையை நீக்கி, பகையை முறித்து, எதிர்ப்பை விலக்கும் ஆற்றல் வாராஹி அம்மனுக்கு உண்டு என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதுவும் குறிப்பாக, தேய்பிறை பஞ்சமி நாளில் வாராஹி அம்மனை வழிபாட்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது ஐதிகம். ஆன்மீகத்தில் ஒவ்வொரு ஆண்டிலும் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. ஆனி மாதத்தில் வரும் நவராத்திரி ஆஷாட நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. அம்மனின் போர்படை தளபதியாக விளங்கும் வராகி அம்மனுக்கு உகந்த நவராத்திரி ஆக இது பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.


CM Stalin: காவிரி விவகாரம்.. நாளை சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு




துலாக்கட்ட காசி விஸ்வநாதர் ஆலயம் 


இந்த ஆஷாட நவராத்திரியினை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கடந்த 6-ம் தேதி துவங்கி மங்கள வராகி அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. எட்டாம் நாளில், ஆஷான நவராத்திரி வழிபாடாக வெண்ணை அலங்காரம் செய்யப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டனர்.


சாட்டை துரைமுருகன் வார்த்தையை அளந்து பேச வேண்டும் - அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை




வாராஹி அம்மனுக்கு வெண்ணை அலங்காரம் 


தொடர்ந்து மங்கள வாராஹி அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், இளநீர், திரவிய பொடி உள்ளிட்ட விஷேச மங்கள பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது, அம்மனுக்கு வெண்ணை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து சோடச தீபாரதனைகளுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


SBI Interest Rate: வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த எஸ்பிஐ வங்கி - கடன்களுக்கான புதிய வட்டி விகிதம் அமல்