தரங்கம்பாடி அருகே டி.மணல்மேட்டில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ மருத்துவதி அம்பிகா சமேத ஸ்ரீ மிருகண்டேஸ்வர சுவாமி, ஸ்ரீ மார்க்கண்டேயர் கோயிலில்  30 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக நடைபெற்ற குடமுழுக்கு விழாவில்
தருமபுர ஆதீனம் மடாதிபதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


புகழ்பெற்ற  வழிபாட்டு தலம்


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா டி.மணல்மேடு கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ மருத்துவதி அம்பிகா சமேத ஸ்ரீ மிருகண்டேஸ்வர சுவாமி, ஸ்ரீ மார்க்கண்டேயர் திருக்கோயில் இக்கோயிலில், ஸ்ரீ மிருகண்டு மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவபெருமானை வழிபட்ட திருத்தலமாக போற்றப்படுகிறது. ஸ்ரீ மிருகண்ட மகரிஷி நல்ல புத்திர பாக்கியம் ஏற்பட வெகு காலம் சிவ பூஜை செய்து வந்ததாக புராணங்கள் கூறுகிறது. அப்படி சிவபூஜை செய்யப்பட்ட ஆலயமாக இந்த டி.மணல்மேடு கிராமத்தில் அமைந்திருக்கக்கூடிய ஸ்ரீ மிருகண்டேஸ்வர சுவாமி ஆலயம் விளங்கி வருகிறது.


ஜவ்வாதுமலையில் விஜயநகர கால கல்வெட்டு கிருஷ்ண தேவமகாராயர் காலத்திய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு




30 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்


இக்கோயிலில் ஸ்ரீ மார்க்கண்டேய பெருமான் மூலவருக்கு தனி சன்னதியும் அமர்ந்திருப்பது தனிச்சிறப்பாகும். மேலும் இக்கோயிலில் வழிபட்டால் நீண்ட ஆயுள்கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய பல்வேறு சிறப்புகள் உடைய இக்கோயில் கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்த கோயில் நிர்வாகத்தினர் பொதுமக்கள் பங்களிப்புடன் திருப்பணிகளை கடந்த ஒர்  ஆண்டாக  செய்து வந்தனர். தொடர்ந்து திருப்பணிகள் அனைத்து நிறைவுற்றதை  அடுத்து மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.


Watch Video: உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்காக மகளிர் அணி வெளியிட்ட வைரல் வீடியோ!




ஆறுகால யாக சாலை பூஜை


கும்பாபிஷேகத்தை  முன்னிட்டு கடந்த ஜூன் 24 -ஆம் தேதி தேவதா அனுக்ஞை, யஜமான சங்கல்பம் செய்து கோயில் வளாகத்தில் யாகசாலை அமைத்து விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமத்துடன் புனித நீர் அடங்கிய கடங்கல் வைத்து  கடந்த 28 ஆம் தேதி, முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக தினத்தன்று ஆறாம் கால யாக சாலை பூஜை நிறைவுற்று மகாபூர்ணஹூதி செய்யட்டு, மகாதீபாரதனை காட்டப்பட்டது. 


Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!




தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு


பின்னர் தருமபுரம் ஆதீனம் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞான சம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் முன்னிலையில் மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோயிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர். தொடர்ந்து வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத கோயில் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.