சீர்காழி சட்டைநாதர் கோயில் 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் திருக்கோயில் சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள் நீங்க இங்கு பூஜையில் பங்கேற்று வழிபட்டுப் பயன்பெறலாம். இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது. இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 


Nandha Saravanan on Vijay: ரோப் இல்லாமல் ஜம்ப் பண்ண விஜய்... பிளாஷ்பேக் அனுபவம் பகிர்ந்த நந்தா சரவணன்




திருஞானசம்பந்தர் வரலாறு


சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது.  சங்கம முர்த்தமான சட்டைநாதர் விஷ்ணுவின் தோலை சட்டையாக உடுத்தியதால் இப்பெயர் உண்டாயிற்று. சீர்காழியில் அவதரித்த திருஞானசம்பந்தர் இக்கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக் கரையில் அழுது நின்ற போது உமையம்மை ஞானப்பால் வழங்கி, இறைவனுடன் காட்சி அளித்த ஸ்தலமாகவும், ஞானம் பெற்ற திருஞானசம்பந்த பெருமான் தனது 3வது வயதில் தோடுடைய செவியன் என்ற முதல் தேவாரப் பதிகத்தை அருளிய தளமாகவும் விளங்கி வருகிறது. 


TN Weather Update: மே 1 - 4 ஆம் தேதி வரை அதிகப்படியான வெப்ப அலை இருக்கும்.. வெதர்மேன் கொடுத்த ரிப்போர்ட்..




சித்திரை பெருவிழா தெப்ப உற்சவம் 


இத்தகைய சிறப்பு மிக்க கோயிலில் சித்திரை பெருவிழா ஆண்டுதோறும் சித்திரை 1-ஆம் தேதி தொடங்கி 20 நாட்கள் நடைபெறும். இவ்வாண்டு சித்திரை பெருவிழா ஏப்ரல் 14 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2-ம் நாள் நிகழ்வாக திருமுலைப்பால் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவின் 13 -ம் நாளின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தெப்ப திருவிழாவான நேற்றிரவு வெகு விமர்சியாக நடைபெற்றது. தெப்ப உற்சவத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள்  சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினர். அதனைத் தொடர்ந்து வேத விற்பனர்கள் வேத மந்திரம் ஓத  மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோயிலின் தீர்த குளத்தில் தெப்பம் மூன்று முறை வலம் வந்து. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கணக்காளர் செந்தில் தலைமையிலான சிப்பந்திகள் செய்திருந்தனர்.


ரூபாய் 397 கோடி! தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதி ஒதுக்கிய மத்திய அரசு!