தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியில் அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோவில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக மிகவும் சிறப்பு வாய்ந்த 1000 ஆண்டுகள் பழமையான இத்திருக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகா சிவராத்திரி அன்று இரவு திருவிழா துவங்கி 5 நாட்கள் நடை பெறுவது வழக்கம்.


IND vs AUS 2nd Test, LIVE Score: 1 ரன்களில் அவுட்டாகிய கே.எல்.ராகுல்..! அதிர்ச்சியுடன் தொடங்கிய இந்தியா




இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி திருவிழாவிற்கான கோவில் கொடியேற்றம் நடைபெற்று. நேற்று 18ஆம் தேதி மாசி மகா சிவராத்திரி முதல் 22ஆம் தேதி வரை 5 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த கோவிலை குலதெய்வமாக வழிபடுவது ஐதீகம். அதே போன்று கோபுரமே இல்லாத கோவிலில் அடைத்த கதவுக்கே பூஜைகள் நடைபெற்று வருகின்றது. 


குன்னூரில் மோசமான வானிலை ; குடியரசு தலைவர் திரெளபதி முர்முவின் குன்னூர் பயணம் இரத்து




முதல் நாள் திருவிழாவான இன்று அதிகாலை முதல் கோவிலின் அருகே உள்ள மஞ்சளாறு ஆற்றில் காமாட்சி அம்மனின் ஓலை பெட்டியில் குழந்தையாக மிதந்து ஐதீகத்தின் அடிப்படையில் கோவில் அறங்காவலர்கள் மற்றும் பரம்பரை பூசாரிகளாக உள்ள குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆற்றில் காமாட்சி அம்மன் திருவுருவாச்சைக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் அடைந்தவுடன் பக்தர்கள் வழிபாடத் துவங்கினர். இதனைத் தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும், செங்கரும்பு கட்டுகளை காணிக்கையாக கொடுத்தும் இரவு முழுவதும் பக்தர்கள் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.


Mayilsamy: கடைசி வரை நிறைவேறாமல் போன மயில்சாமியின் ஆசை..! இனியாவது நிறைவேறுமா..?




Viral Video: '3 இடியட்ஸ்' - நடிகர் மாதவனின் ஆடிஷன் டேப்.. இன்ஸ்டாவில் வைரலாகும் பதிவு..


இந்த கோவில் திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்காக  இந்து சமய அறநிலையத்துறை பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் கோவில் மற்றும் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் 30க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொருத்தி காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவதோடு திருவிழாவில் பக்தர்கள் கூட்டத்தை சீர் செய்வதற்காக பெரியகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் ஆறுy காவல் ஆய்வாளர்கள் மற்றும் 12 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண