திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர், தென் மாவட்ட எல்லையாக உள்ளது. இந்த மாவட்ட எல்லைக்குள் நுழையும் அனைத்து வாகன ஓட்டிகளும் அய்யலூரில் உள்ள காவல் தெய்வமான வண்டி கருப்பணசாமி கோவில் முன்பு வாகனங்களை நிறுத்தி பூஜை செய்துவிட்டு ஊருக்கு செல்வது வழக்கம். அதேபோல் வாகன ஓட்டிகள் மற்றும் தொழில் செய்வோர்  அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாதத்தில் வந்து கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி சிறப்பு பூஜை செய்வது வழக்கம்.


நாட்டுக்கு அவமானம்..அக்கிரமத்தை பொறுத்த கொள்ள முடியாது..மணிப்பூர் விவகாரத்தில் கொந்தளித்த பிரதமர் மோடி




 


இந்த நிலையில் இன்று தமிழ் பண்பாட்டு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக 14-வது ஆண்டு வருடாந்திர பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மேடை நடன கலைஞர்கள் அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து கருப்பணசாமி, அய்யனார், பத்திரகாளியம்மன், மாரியம்மன், நீலி அம்மன், ராமர் உள்ளிட்ட தெய்வங்களின் வேடமணிந்து நாடக கலைஞர்கள் பக்தி பரவசத்துடன் நடனமாடியபடி ஊர்வலமாக சென்றனர். அதனைத்தொடர்ந்து கட்டைக்கால் ஆட்டம், நாசிக் டோல், பாரம்பரிய பறையாட்டம் உள்ளிட்ட நடைபெற்றன.


Manipur Violence : மணிப்பூரில் பயங்கரம்: தரதரவென இழுத்து.. 2 பெண்களை நிர்வாணமாக நடக்கவிட்ட கொடூரம்..




Stock Market Update: ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வரும் இந்திய பங்குச்சந்தை; 67 ஆயிரம் புள்ளிகளில் சென்செக்ஸ்!


சிறுவர்கள் கட்டைகால் ஆட்டம் மற்றும் பறையாட்டம் ஆடியதும், கூட்டத்தில் ஊர்வலமாக வந்த நடனக்கலை பெண்கள் சேலையை தூக்கியபடி குத்தாட்டம் போட்டபடி வந்ததும் காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதனைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டப்பட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கப்பட்டது.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண