மோடிக்கு லேட்டாக வாழ்த்து சொன்ன பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.. என்ன மேட்டர்?

Pakistan PM: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி 6 நாள்கள் கழித்து, மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

வரலாற்று ரீதியாகவும் சமகால அரசியல் சூழல் காரணமாகவும் பாகிஸ்தானும் இந்தியாவும் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, காஷ்மீர் பிரச்னை இரு நாடுகளுக்கு இடையே தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ளது. பாகிஸ்தானில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளும் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல, இந்தியாவில் நடக்கும் அரசியல் நகர்வுகளை பாகிஸ்தான் உற்று கவனிக்கும்.

Continues below advertisement

மீண்டும் ஆட்சி அமைத்த பாஜக: இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த வாரம் தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில், யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைத்தது.

Continues below advertisement