பூங்காவிற்கு வந்திருக்கும் பார்வையாளர்களிடம் கியூட்டாக கை நீட்டி உணவு கேட்கும் ஒராங்குட்டானின் விடியோ ஒன்று வைரலாகி வருகிறது.


விலங்குகளின் சேட்டைகள்


விலங்குகள் செய்யும் சேட்டைகளை ரசிக்காதவர்கள் கிடையாது. அவ்வபோது அவை செய்யும் விஷயங்கள் வீடியோவாக வெளியாகி வைரலாகும். வீட்டு வளர்ப்பு செல்லபிராணிகள்தான் இதில் ஏராளம் என்பதால் அந்த வீடியோக்கள் எளிதில் கிடைத்துவிடும். ஆனால் வன விலங்குகள் செய்யும் சேட்டைகள் கொஞ்சம் அரிது. அதிலும் குரங்குகள் செய்யும் சேட்டைகள் தான் அதிகம் ரசிக்கப்படுகிறது. அதற்கு காரணமும் உண்டு. குரங்குகள் அதிக மனிதனின் சாயல் கொண்டவை. அவை அடிக்கடி மனிதனை போலவே செய்யும் செயல்கள் காண்போரை ஈர்க்கிறது. அப்படி தான் தற்போது வைரல் ஆகி வரும் இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.



வைரலாகும் வீடியோ


மிருகக்காட்சிசாலையில் உள்ள ஒராங்குட்டான் ஒன்று அங்குள்ள மக்களிடம் மிகவும் க்யூட்டாக உணவைக் கேட்கும் அதன் வித்யாசமான பாடி லங்குவேஜை இந்த வீடியோ காட்டுகிறது. அந்த குரங்கு கையை நீட்டி கேட்பது மீண்டும் மீண்டும் பார்க்கும் அளவுக்கு ரசிக்கும்படியாக உள்ளது. இந்த வீடியோ @buitengebieden என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த ஹேண்டில் அதன் 1.9 மில்லியன் ஃபாலோயர்களுக்கு அழகான மற்றும் வேடிக்கையான விலங்கு வீடியோக்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்: "என்னைப்போல் ஒருவன்"- வெகுண்டெழுந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி! என்ன நடந்தது?


கையை நீட்டி நிற்கும் உராங்குட்டான்


"இப்போது அதை எனக்குக் கொடுங்கள்..." என்ற தலைப்போடு ஆன்லைனில் பகிரப்பட்ட அந்த வீடியோ ஒரு பெண் தனது கைகளில் ஒரு பழத்தை வைத்திருப்பது போன்ற காட்சியோடு துவங்குகிறது. வீடியோவில் மேலும், ​​ஒரு உயிரியல் பூங்காவிற்குள் ஒரு ஒராங்குட்டான் கையை நீட்டி நிற்பதைக் காண முடிகிறது. மேலும் அந்த குரங்கின் வேடிக்கையான செயலை காண்பிக்க ஜூம் செய்து காண்பிக்கிறார்கள். 






கமெண்ட்ஸ்


இந்த வீடியோ ஒரு நாள் முன்பு பகிரப்பட்டுள்ளது. அதற்குள் 1.2 மில்லியனுக்கும் அதிகமான வியூவ்ஸ் பெற்றதோடு இன்னமும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த பகிர்வை கண்ட பலர் கீழே கமெண்ட் செய்துள்ளனர். "அவருக்கு அந்த போஸை யார் கற்றுக் கொடுத்தது?" என்று ஒருவர் கேட்டார், "அந்த குரங்கு கொடு என்று கேட்கவில்லை, கட்டளை இடுகிறது," என்று ஒருவர் கருத்து தெரிவித்தார். "இந்த விடியோ அல்புகெர்கி பயோ பார்க்கில் இருந்து வருகிறது. அந்த குறிப்பிட்ட ஒராங்குட்டான் அடிக்கடி உணவை அங்கு வரும் மக்களிடம் கேட்கிறது", என்று நான்காவது பகிர்ந்துள்ளார்.