கடந்த 2022 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த நிலையில், கிட்டத்தட்ட 18 மாதங்களாக போர் தொடர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் போரில் உக்ரைன் சற்று பின் தங்கியிருந்தாலும் அமெரிக்கா மற்றும் இதர நாடுகளின் உதவியுடன் தற்போது வரை தாக்குப்பிடித்து வருகிறது. பெரும்பாலான நகரங்களில் இருந்து ரஷியா, தங்களின் படைகளை திரும்பப்பெற்றது. சமீப காலமாகவே, போரில் ரஷியா பின்னடைவுகளை சந்தித்து வந்த நிலையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் அந்நாடு மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியது.


உக்ரைன் - ரஷ்யா போர்:


இந்த போரை நிறுத்த இரு நாடுகளுக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. பள்ளிக்கூடங்கள், கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் போன்றவை இரு நாட்டு தாக்குதலில் சிக்கி கடுமையாக சேதமடைந்து வருகிறது.


இதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போரினால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர், ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த போரில் உக்ரைன் நாட்டுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகிறது.


ட்ரோன் தாக்குதல்:


இந்நிலையில் சமீபகாலமாக உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்றைய தினம் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல் மூலம் 2 பேர் உயிரிழந்தனர். நேற்று உக்ரைனின் தலைநகரான கிவ் மற்றும் கார்கிவ் ஆகிய பகுதிகளில் சரமாரியாக ட்ரோன் தாக்குதல் நடத்தியது.


இதில் அப்பகுதியில் இருக்கும் ஏராளமான குடியிருப்புகள், வணிக வளாகங்கள் இடிந்து விழுந்தது. இந்த தாக்குதலில் குடியிருப்பு இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். அதே சமயம் 18 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உக்ரைன் நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


சமீபத்தில் உக்ரைன் நாட்டிற்கு 2.5 பில்லியன் டாலரை அமெரிக்கா வழங்கியது. மேலும் 31 போர் பீரங்கிகளை வழங்கவும் உறுதியளித்துள்ளது. ஓராண்டுக்கும் மேலாக இந்த போர் நடைபெற்று வருவது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில், அமெரிக்கா மேலும் 250 மில்லியன் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததிலிருந்து அமெரிக்கா இதுவரை 10 பில்லியன் டாலருக்கு அதிகமான பொருளாதார மற்றும் ராணுவ ரீதியிலான உதவிகளை செய்துள்ளது.


பல காலமாக உக்ரைன் பிரச்னை நிலவி வந்தாலும், உக்ரைன் நேட்டோவில் இணைய வேண்டும் என்று கடந்த சில வருடங்களாக காட்டி வரும் ஆர்வம்தான்தான் இந்த போருக்கு காரணமாக அமைந்தது. கடந்த 1960களில், அமெரிக்க ரஷ்யாவுக்கு இடையில் நிலவி வந்த உச்சக்கட்ட பனிப்போருக்கு பிறகு, நடந்த மிக மோசமான மோதலாக மாறியுள்ளது உக்ரைன் போர். இதனால், அமெரிக்க, ரஷ்ய நாடுகளின் உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. 


India vs Canada Issue: ”தீவிரவாதிகளுக்கு இடமளிக்காதீர்கள்” - கனடா பிரச்னைக்கு மத்தியில் தொலைக்காட்சிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்