விழுப்புரம்: விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் செயல்படும் குளிர்பான கடையில் ரஸ்க் பாக்கெட்டை வாங்கியவரிடம் பணம் கேட்டதற்கு தரமாட்டேன் என கூறி பெண் கடை ஊழியரை வாடிக்கையாளர் மற்றும் பெண் ஒருவரும் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பபை ஏற்படுதிள்ளது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தனசேகரன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்றைய தினம் கடையில் உஷா, பிரியங்கா ஆகிய இருவர் பணியில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்த ராஜபாண்டியன் என்பவரது  சகோதரி ஆகியோர்  கடையில் இருந்த  ரஸ்க் பாக்கெட்டை வாங்கிவிட்டு  பணம் தராமல் செல்ல முயன்றுள்ளனர்.


நடனக்கலைஞர் ஜாகீர் உசைனுக்கு ஸ்ரீரங்கம் கோயிலில் அனுமதி மறுப்பு - மன அழுத்தத்தால் மருத்துவமனையில் அனுமதி




இதனையடுத்து கடையில் பணியில் இருந்த பெண் ஊழியரான பிரியங்கா, பணம் கேட்டதற்கு பணம் தர முடியாது என ரஸ்க் பாக்கெட்டை எடுத்த பெண் கூறி “புதிய பேருந்து நிலையத்தில் கடையே நடத்த முடியாது” ``என்னிடமே காசு கேட்கிறியா” என வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அருகிலுள்ள வழுதரெட்டி பகுதிக்கு சென்று தனது உறவினர்களை அழைத்து வந்து கடையில் சண்டையிட்டுள்ளார்.





அப்போது ராஜபாண்டியன் மற்றும் அவரது சகோதரி பெண் கடை ஊழியரை கன்னத்தில் அறைந்து தாக்கியுள்ளனர். கடையில் ரஸ்க் எடுத்து கொண்டு பணம் தராமல் பெண், கடை ஊழியரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கடை ஊழியர்கள் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார்  எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக பாதிக்கபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.


 


மேலும் படிக்க...


 


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


 


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


 


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


 




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 




 


ட்விட்டர் பக்கத்தில் தொடர