தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள வீடற்றோர் தங்கும் இல்லத்தில் மாநகராட்சி தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் உலக வீடற்றோர் தினவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் சண் .ராமநாதன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் ஜெய்சதீஷ் முன்னிலை வகித்தார். வீடற்றோர் தினத்தை முன்னிட்டு அங்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வீடற்றோர் இல்லத்தில் தங்கி உள்ள முதியவர்கள், ஆதரவற்றவர்களிடம் மேயர் சண் ராமநாதன் கலந்துரையாடி அவர்களின் தேவைகளை கேட்டு அறிந்தார்.




அப்போது அவர் பேசியதாவது, ''உங்களின் அனைத்து தேவைகளும் நிறைவேற்றித் தரப்படும். ஏதாவது குறைகள் கூறினால் உடனுக்குடன் அது சரி செய்யப்படும். இந்த இல்லத்தின் முதல் மாடியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளன. மேலும் பூங்கா அமைய உள்ளது. இல்லத்தின் முன்பு நீங்கள் அனைவரும் கலந்துரையாடி பேசுவதற்காக இருக்கைகள் போடப்பட உள்ளன. வருகிற தீபாவளி பண்டிகை அன்று நான் உங்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாடுவேன்.'' இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவி பொறியாளர் மகேந்திரன், இளநிலை பொறியாளர் ஆறுமுகம் மற்றும் பலர் பலர் கலந்து கொண்டனர்.






கோவிலூர் பாத்திமா மெட்ரிக் பள்ளியில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

தமிழக அரசால் அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கான எண்ணம் எழுத்தும் பயிற்சி முகாம் தொடங்கியது அதன்படி அம்மாபேட்டை வட்ட பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் கோவிலூர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதனை பள்ளி வளர்ச்சி துறை அதிகாரி அழகு தமிழ் பள்ளி முதல்வர் துர்கா பள்ளி நிர்வாக அலுவலர் குணசேகரன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சீனிவாசன் புனித மேற்பார்வையாளர் செல்லையா இளங்கோ ஆகியோர் தொடங்கி வைத்தனர் நாளை புதன்கிழமை வரை நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 250 ஆசிரியர்கள் பங்கு கொள்கின்றனர்.