தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை,
இந்நிலையில் இரவு 9 மணி ஆகியும் சஷ்மிதா வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பாவைநாதன் வழக்கம் போல் குடி போதையில் வந்து மனைவி சரண்யாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றவே, இதனையறிந்த தாய் அஞ்சம்மாள், தன் மகன் பாவைநாதனை கண்டித்துள்ளார். பள்ளியில் படிக்கும் பெண் தாமதமாக வருவதை குறித்து கேட்டால், என்னை சமாதானம் செய்கீறீர்கள் என்று கேட்டு, ஆத்திரமடைந்தார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற பாவைநாதன், அருகிலிருந்து வீட்டிற்கு காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து, தாயை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், தலை மட்டும் முதுகில் பலத்த கத்தி குத்துப்பட்டு காயமடைந்து கீழே விழுந்து சுயநினைவின்றி கிடந்துள்ளார்.இதையறிந்த அவரது குடும்பத்தினர், அஞ்சம்மாளை, ஆட்டோவில் மருத்துவமனை கொண்டு சென்றார்கள். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி காவல்துறைக்கு தெரியப்படுத்தாமல் அஞ்சம்மாள் சடலத்தை, மயானத்திற்கு எடுத்துச் சென்று எரிக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்து அதற்கான ஏற்பாடு செய்து வந்தனர். தாயை மகன் கொலை செய்த தகவல் பட்டுக்கோட்டை போலீசார் ரகிசயமாக தெரிய வந்தது. பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற, அஞ்சம்மாளின் உடலை கைப்பற்றி, மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து வழக்கு பதிவு செய்து, மகன் பாவைநாதனை போலீசார் கைது செய்துள்ளனர். குடிபோதையில், மகனே, தாயை குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.