தஞ்சாவூர்: தஞ்சாவூர் மக்களே உங்களின் கவனத்திற்கு நாளை 15ம் தேதி கீழ்கண்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.


தஞ்சாவூர் நகர துணை மின் நிலையத்தில் நாளை 15-ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, தஞ்சாவூர் மேம்பாலம், சிவாஜிநகர், சீனிவாசபுரம், ஆப்ரஹாம் பண்டிதர் நகர், திருநகர், மேலவீதி, தெற்கு வீதி, மேலஅலங்கம், ரயிலடி, சாந்தபிள்ளைகேட், வண்டிக்காரத் தெரு பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.


இதே போல் தொல்காப்பியர் சதுக்கம், ஜிஏ கேனால் ரோடு, திவான் நகர், ஜோதிநகர், ஆடக்காரத் தெரு, பர்மா பஜார், கீழவாசல், கொள்ளுப்பேட்டைத் தெரு, வாடிவாசல் கடை தெரு, பழைய மாரியம்மன்கோயில் ரோடு, ராவுத்தர் பாளையம், கரம்பை, பழைய பேருந்து நிலையம், கொண்டிராஜாபாளையம், வ.உ.சி.நகர், மகளிர் காவல் நிலையம், மைனர் ஜெயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது. இத்தகவலை உதவி செயற்பொறியாளர் க.பாலநேத்திரம் தெரிவித்துள்ளார்.