மயிலாடுதுறை அருகே மூவலூர் மங்கள சௌந்தரநாயகி சமேத மார்க்கசகாய சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது.


மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட தேவாரப்பாடல் பெற்ற மங்கள சௌந்தரநாயகி சமேத மார்க்கசகாய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சுவாமி சதாசிவ மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இறைவனை சௌந்தர நாயகி அம்பாள் திருக்கல்யாணம் புரிந்த தலமாகவும், துர்காபரமேஸ்வரி மகிஷாசூரனை வதம் செய்த பின்னர் இங்கு எழுந்தருளியுள்ள சுவாமியை வழிபட்டு அகோர வடிவிலிருந்து சௌந்தர்ய வடிவு பெற்ற தலமாகவும், வழித்துணை நாதருக்கு இதய நோய் தீர்த்த தலமாகவும், பிப்பல மகரிஷி முக்தி அடைந்த தளமாகவும் புராண வரலாறு கூறுகிறது.   




இத்தகைய பல்வேறு சிறப்புகளையுடைய இவ்வாலயத்தின் பங்குனி உத்திர பிரம்மோத்ஸவ பெருவிழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. ஒன்பதாம்  திருநாளின் முக்கிய விழாவான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் இருந்து மார்க்கசகாய சுவாமி சௌந்தரநாயகி அம்பாளுடன் திருத்தேரில் எழுந்தருளினார். 


Varahi Amman: வராஹி அம்மன் வழிபாட்டு முறைகள் என்னென்ன? பின்னணி மற்றும் முக்கியத்துவம் என்ன?




பின்னர் மகாதீபாராதனை செய்யப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய தலைவர் காமாட்சி மூர்த்தி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து  இழுக்க திருத்தேரானது நான்கு ரதவீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது. வீடுகள் தோறும் பொதுமக்கள் அர்ச்சனை செய்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். தேர்த்திருவிழாவை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.


CBSE Syllabus: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து முகலாயர்கள் குறித்த பாடம் நீக்கம்; என்சிஇஆர்டி அறிவிப்பு




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண