மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்து கோணயாம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சின்னபிள்ளை என்பவரின் மகன் 55 வயதான நாகராஜன்.  இவர்  தமிழக அரசின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு பெற்று அதை முழுவதுமாக பூர்த்தி செய்ய தனியார் நிதி நிறுவனம் பிரதிநிதி மூலம் 1 லட்சம்  ரூபாய் கடன்பெற்று அதை கட்டி முடித்துள்ளார். 


South Actress Salary : நயன்தாரா டு ராஷ்மிகா.. உங்களுக்கு பிடிச்சவங்க சம்பளத்தை செக் பண்ணுங்க..




மேலும் தனியார் நிதிநிறுவனத்திடம் கடனை வாங்கிக் கொடுத்த நிதி நிறுவன பிரதியிடம் மாதத்தவனை செலுத்தி வந்துள்ளார். திடீரென்று தவணையே கட்டவில்லை என்று நிதிநிறுவனத்தில் இருந்து வேறு நபர் வந்து பணம் கேட்டுள்ளார். இவர் பணம் கட்டியதற்கான கணக்கை காட்டியுள்ளார். ஆனால், அந்தப்பணம் நிதி நிறுவனத்தில் கட்டப்படாமல் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. 


Corona Death : தமிழ்நாட்டில் மூன்று மாதங்களுக்கு பிறகு கொரோனா உயிரிழப்பு.. மீண்டும் அச்சுறுத்தும் பெருந்தொற்று..




மேலும், அங்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அவரை வேலையை விட்டு நிறுத்திவிட்டதாக கூறியுள்ளனர்.  கடன் தவனை கட்டிவந்த ரசீது கேட்டால் பிறகு தருகிறேன் என கூறியும் மிஷின் வேலை செய்யவில்லை என்று கூறி தவணை தொகையினை பெற்று சென்றுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி நாகராஜ் ஊரில் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு சென்ற நிதி நிறுவனத்தினர் அவரது தந்தை சின்னப்பிள்ளையிடம் கடன்கேட்டு தகராறு செய்துள்ளனர். இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் கீழே விழுந்த சின்னப்பிள்ளை மறுநாள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.   




இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது நிதி நிறுவனத்தினர் வந்து பேசி இனிமேல் இதை பெரிதுபடுத்தவேண்டாம், இனிமேல் நீங்கள் கடனை கட்டவேண்டாம் என கூறிச்சென்றுவிட்டனர். ஆனால் தற்போது மீண்டும் இரண்டரை ஆண்டுகள் கழித்து சென்ற ஆண்டிலிருந்து கடனைக் கட்டச் சொல்லி தகராறு செய்து வருகின்றனர்.  இதுகுறித்து நாகராஜன் மற்றும் அவரது மனைவி  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் நேற்று முன்தினம் மீண்டும் நிதி நிறுவனத்தினர் வீட்டிற்கு சென்று இரண்டரைலட்சம் கடனை திருப்பிக் கட்டவேண்டும் இல்லை என்றால், உங்களது வீட்டை ஜப்தி செய்துவிடுவோம் என மிரட்டிச்சென்றுள்ளனர். இதுகுறித்து விசாரணை செய்து எனது வீட்டை ஜப்தி செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுத்து நான் குடியிருக்கும் வீட்டை எங்களுக்கு கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண