மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாலங்காடு ஊராட்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த கல்லூரிக்கு என தனியாக இடம் ஒதுக்கப்படாத நிலையில்  மாதிரிமங்கலம் கிராம சேவை மைய  கட்டிடத்தில் கல்லூரி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு கல்வி பயின்று வருகின்றனர். 


Jobs : ஏதேனும் ஒரு டிகிரி இருக்கா? பொதுத்துறை நிறுவனத்தில் 137 காலிப்பணியிடங்கள். உடனே அப்ளை பண்ணிடுங்க..




கல்லூரி இயங்கும் கட்டிடத்தில் மாணவர்கள் தனி தனி வகுப்பு அறையில் அமர்ந்து பயில்வதற்கு  வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் இட நெருக்கடியில் சிக்கித் இன்னலுக்கு மத்தியில் கல்வி பயின்று வருகின்றனர். மேலும், அடிப்படை தேவையான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் மாணவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.


Jonita Gandhi Workout Video: சினிமாவில் அரபிக்குத்து... ஜிம்மில் செம கெத்து.. ஜோனிடா வெளியிட்ட அல்டிமேட் வீடியோ




இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், உயர்கல்வி துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நிரந்தர வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் சரிவர செய்து தர எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி போதிய பேராசிரியர்கள் இல்லாததால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் அரசு உரிய நடவடிக்கை எடுக்காததை  கண்டித்தும், இன்று மாணவர்கள்  வகுப்புகளை புறக்கணித்து இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் தலைமையில் மயிலாடுதுறை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் திருவாலங்காடு மெயின் ரோட்டில் திரண்டு  சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   




Avadi Double Murder Case: கள்ளக்காதலால் மனைவி எஸ்கேப்! நிர்வாண வீடியோ..! - ஆவடி இரட்டைக்கொலையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்..!


இதனை அடுத்து தகவலறிந்து குத்தாலம் தாசில்தார் பிரான்ஸ்வா மற்றும் குத்தாலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களிம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அடிப்படை வசதிகளுடன் உள்ள கட்டிடத்திற்கு கல்லூரியை தற்காலிகமாக  இடமாற்றம் செய்வதாகவும்,  கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அரசு அனுமதியுடன் கல்லூரி கட்டி தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக் கொண்டு மாணவர்கள்  இரண்டு மணி நேரமாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு  மாணவர்கள் கலைந்து சென்றனர். மேலும் அதிகாரிகளிடம் தங்களுக்கு கல்வி பாதிக்கப்படாத வகையில் விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும், இல்லையெனில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என மாணவர்கள் கூறி சென்றனர்.