தஞ்சை பாலாஜி நகரை சேர்ந்தவர் அம்பேத்கர் (38). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கொரோனா பரவலால் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அதன் பிறகு அவர்  வெளிநாடு செல்லவில்லை. இந்நிலையில் தஞ்சை ஈஸ்வரி நகர், விக்டோரியா காலனியை சேர்ந்த நண்பரான அருண்குமார் என்பவர்,

  நான் கூறும் பங்குசந்தையில் பணம் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம் என அம்பேத்கரிடம் ஆசை வார்த்தை கூறினார். அதன்படி தான் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தில், அம்பேத்கர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை ரூ.27 லட்சம் அருண்குமார் மனைவி கார்த்திகா, அவரது சகோதரி ஆகியோரின் வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார். இதில் ரூ.7 லட்சம் மட்டும் அம்பேத்கருக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டது.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Local Body Election 2022 | எம்.பி. பதவியை விட கவுன்சிலர் பதவிதான் முக்கியம் - காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்




பல நாட்களாக மீதி பணம் கொடுக்கப்பட வில்லை. பல முறை அருண்குமாரிடம் பணம் கேட்டு பார்த்தார். பணம் தராததால், சந்தேகமடைந்த அம்பேத்கர், தான் ஏமாற்றப் பட்டோம் என்பதை உணர்ந்த அம்பேத்கர் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஞானசுமதி வழக்கு பதிவு செய்து அருண்குமார், அவரது மனைவி கார்த்திகா ஆகிய இரண்டு பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.இதே போல், தஞ்சையை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ஏரியா மேனேஜர் ஆக உள்ளார். இவர் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Local body election | கடைசி நாள் பரப்புரையிலும் காணாமல் போன தேமுதிக - திருவண்ணமலையில் 273 பதவிகளில் 18 இடங்களில் மட்டுமே போட்டி




மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Local Body Election: என்னை கொல்ல முயன்றவருக்கு திமுக சீட் கொடுத்துள்ளது - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்


அதில் கூறியிருப்பதாவது,  எங்களது தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் கரூர் பகுதியை சேர்ந்த சேல்ஸ் மேனேஜர் மணிகண்டன், புதுக்கோட்டையை சேர்ந்த கமிஷன் ஏஜென்ட் துரைராசு மற்றும் ஆறுமுகம் ஆகிய மூன்று பேர் சேர்ந்து நிதி நிறுவனத்தில் கடன் கேட்டு வருபவர்களின் ஆவணங்களுக்கு போலி ஆவணம் தயாரித்து சுமார் ரூ.2 கோடியை 54 லட்சத்து 50 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஞான சுமதி வழக்கு பதிவு செய்து மணிகண்டன் உள்பட 3 பேரையும் கைது செய்து, வேறு நிறுவனத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து ஏமாற்றியுள்ளார்களா, இதில் நிறுவனத்திலுள்ள வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என தீவிரமாக  விசாரணை நடத்தி வருகிறார்.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- நாகையில் போலி ஆவணங்கள் மூலம் கோயில் இடத்தை பட்டா மாற்றம் செய்த விஏஓ மீது வழக்கு பதிவு