கன்னியாகுமரி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்களில் இரவு 1 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆகையால், இப்பகுதி மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். 

தமிழ்நாட்டின் 6 நாட்களுக்கு வானிலை:

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இந்நிலையில் நாளை ( 22-04-2025 )தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

23-04-2025 முதல் 27-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Also Read: E-Pass: நீலகிரியின் 4 இடங்களில் மட்டும் இ பாஸ்..சுற்றுலா போறவங்க நோட் பண்ணிக்கோங்க!

சென்னை வானிலை :

சென்னையில் நாளை (22-04-2025)  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read: Subhanshu Shukla: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இந்தியர்: சுபான்ஷூ சுக்லா யார்?

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 22-04-2025 முதல் 25-04-2025 வரை  ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3' செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இதனால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.