TN Budget 2023: தமிழ்நாடு பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? - ஓர் அலசல்
TN Budget 2023: மகளிருக்கு ரூபாய் 1000, சோழர் அருங்காட்சியகம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்தார்.
Continues below advertisement
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றின் தொகுப்புகளை தெரிவித்தார்.
Continues below advertisement
- மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோருக்கு சென்னையில் நினைவிடம்
- அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். இதற்காக ரூபாய் 5 கோடி மானியமாக வழங்கப்படும்.
- தமிழ் மொழியில் மென்பொருள்கள் உருவாக்கப்படுவதை ஊக்குவிக்க தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்.
- தமிழர் பண்பாட்டு தலங்களை இணைக்க தமிழ் பண்பாட்டு கடல்வழிப் பயணங்கள் ஊக்குவிக்கப்படும்
- 591 அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை அரசு வழங்கி வருகிறது.
- சென்னையில் நடத்தப்பவும் சங்கமம் கலை விழா போன்று 8 முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
- தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும்.
- இலங்கை தமிழர்களுக்கு 2ம் கட்டமாக 3 ஆயிரத்து 959 வீடுகளை கட்ட வரும் நிதியாண்டில் 223 கோடி ரூபாயை அரசு வழங்கும்.
- ராணுவத்திற்காக உயிர்த்தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இழப்பீடு 20 லட்சம் ரூபாயில் இருந்து ரூபாய் 40 லட்சமாக அதிகரிக்கப்படும்.
- 711 தொழிற்சாலைகளில் உள்ள 8.35 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவ திட்டம் விரிவுபடுத்தப்படும்.
- கிண்டி கிங் மருத்துவமனையில் கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு திறக்கப்படும்.
- பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வரும் நிதியாண்டில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் என மொத்தம் 1500 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ப்படும்.
- எண்ணும் எழுத்தும் திட்டம் வரும் நிதியாண்டில் ரூபாய் 110 கோடி செலவில் நான்காம் – ஐந்தாம் வகுப்புகளுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
- சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும்.
- பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும்.
- மதுரையில் மாபெரும் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்ற இந்த நூலகம் ஜூன் முதல் செயல்படும்.
- 54 அரசு பாலிடெக்னிக் ரூபாய் 2 ஆயிரத்து 783 கோடி மதிப்பிட்டில் திறன்மிகு மையங்களாக தரம் உயர்த்தப்படும்
- ரூபாய் 120 கோடி மதிப்பில் சென்னை அம்பத்தூரில் தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும்.
- இளைஞர்களுக்கு தொழிற்சாலைகளிலேயே பயிற்சி அளித்திட தொழிற்நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.
- தொழிற்சாலைகளின் திறன்பள்ளிகள் திட்டத்திற்கு 25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
- குடிமைப்பணிகள் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் முதல்நிலை தேர்விற்கு மாதத்திற்கு ரூபாய் 7 ஆயிரத்து 500 வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
- முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25 ஆயிரத்திற்கு ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
- சென்னையில் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரத்தை இந்த அரசு அமைக்கும்.
- மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நான்கு புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
- ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினருக்கான துணைத்திட்டம் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய சிறப்பு சட்டத்தை இந்த அரசு இயற்றும்
- அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதற்கு ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூபாய் 1500ஆக அதிகரிப்பு.
- செப்டம்பர் 15-ந் தேதி முதல் மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1000 வழங்கப்படும்
மேலும் படிக்க: TN Budget 2023 LIVE: சென்னை, மதுரை உள்ளிட்ட 7 மாநகராட்சிகளில் இலவச WIFI வசதி; பட்ஜெட்டில் அறிவிப்பு
மேலும் படிக்க: TN Budget 2023: மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை அதிகரிப்பு.. இலங்கை தமிழர் முகாம்களில் 7 ஆயிரம் புதிய வீடுகள் - பட்ஜெட்டில் அறிவிப்பு
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.