TN Budget 2023 LIVE: வரும் நிதி ஆண்டில் ரூ.1.43 லட்சம் கோடி கடன் பெற அரசு திட்டம் என பட்ஜெட்டில் தெரிவிப்பு
TN Budget 2023 LIVE Updates: தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசித்து வருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
பேச்சி ஆவுடையப்பன்Last Updated: 20 Mar 2023 01:37 PM
Background
TN Budget 2023 LIVEதமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். வழக்கத்திற்கு மாறாக இந்த பட்ஜெட்டுக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.குடும்ப தலைவிகளுக்கான உரிமைத் தொகை...More
TN Budget 2023 LIVEதமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். வழக்கத்திற்கு மாறாக இந்த பட்ஜெட்டுக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.குடும்ப தலைவிகளுக்கான உரிமைத் தொகை திட்டம்:குடும்ப தலைவிகளுக்கான 1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டம் குறித்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியிடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தது தான், பொதுமக்களிடையே பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு இந்த அளவிற்கு அதிகரிக்க காரணமாக உள்ளது. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில், அதற்கான அறிவிப்பு வரவில்லை. இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனங்கள் செய்து வந்தனர். இதற்கு மத்தியில், ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கத் தொடங்குவதற்கான தேதி குறித்த அறிவிப்பு பட்ஜெட் தாக்கலில் இடம்பெறும்” என்று உறுதியளித்தார். இதையடுத்து, உரிமை தொகை தொடர்பான அறிவிப்பு மட்டும் இன்றி, பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இதில் வெளியாக உள்ளன. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்ற விவரமும் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கும். மேலும், இந்த பட்ஜெட்டில் துறை சார்ந்த சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள்:அதில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான திட்டம், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினரின் கோரிக்கைகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளையும் பட்ஜெட்டில் அரசு வெளியிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, நெல் கொள்முதல் விலை, மின்சார கட்டணம், புதிய பாடத்திட்டம், கேஸ் மானியம் என பல்வேறு எதிர்பார்ப்புகளும் பொதுமக்களிடையே நிலவுகிறது.சுமார் 2 மணி நேரத்திற்கு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த பட்ஜெட் உரையை வாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது..வேளாண் பட்ஜெட்:இந்த கூட்டத்தில் சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும். அதில் என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும். சட்டப்பேரவையில் இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை தொடர்ந்து, நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. சுமார் 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. திமுக அரசை எதிர்த்தும், தமிழகத்தில் நிலவும் சட்ட-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். நிறைவு நாளில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கை தொடர்பாக விரிவாக பதில் அளிப்பார்.
TN Budget 2023 LIVE: ”7 மாநகராட்சியில் இலவச wifi வசதி”
சென்னை, தாம்பரம், ஆவடி,கோவை,மதுரை, திருச்சி,சேலம் ஆகிய 7 மாநகராட்சிகளின் முக்கிய இடங்களில் இலவச வை-ஃபை வசதி ஏற்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Budget 2023 LIVE: ”ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சியில் புதிய தொழிற்சாலை”
ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சியில் தோல்பொருள் தொழிற்சாலை அமைக்கப்படும். இதனால் 32, 000 பெண்களுக்கு வேலைவாப்பு கிடைக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது
TN Budget 2023 LIVE: ”உயிர் தியாகம் செய்த ராணுவத்தினரின் குடும்பத்துக்கு 40 லட்சம் உதவி”
நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் போது உயிர் தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த படைவீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை 20 லட்சம் ரூபாயில் இருந்து, இருமடங்காக உயர்த்தி 40 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
”ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வர்களுக்கு 10 கோடி நிதி உதவி”
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குடிமைப் பணி தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு முதல் நிலைத் தேர்வுக்கு தயாராக மாதம் ரூ.7,500 முதன்மைத் தேர்வுக்கு ரூ.25,000 உதவித்தொகை ஆண்டுக்கு 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்.
அனைத்து பள்ளிகளும் பள்ளி கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்படும் - நிதியமைச்சர்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் பள்ளிகள் மற்றும் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளில் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளி கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்படும்
TN Budget 2023 LIVE: மருத்துவத்துறைக்கு 18,661 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர்
2023-24ஆம் ஆண்டுக்கான் பட்ஜெட்டில், மருத்துவத்துறைக்கு 18,661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகாரஜன் அறிவித்தார்.
வருவாய் பற்றாக்குறையை 30 ஆயிரம் கோடியை குறைத்துள்ளோம்- நிதியமைச்சர்
வருவாய் பற்றாக்குறையை 30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளோம், வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை மேலும் குறையும் வாய்ப்புள்ளது எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் எதிர்க்கட்சித்தலைவர் ஆலோசனை
தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சி அறையில், அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசானி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 2021 ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2022 ஆம் ஆண்டு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மூன்றாவது முறையாக இன்று, இரண்டாவது முழுமுதல் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டு தடை மசோதா மீண்டும் தாக்கல்?
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுக்களை தடை செய்வதற்கான மசோதாவை, ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் மீண்டும் தாக்கல் செய்ய திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.
TN Budget 2023 LIVE: பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக அரசின் பட்ஜெட்டில் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு - அதேபோல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மற்றும் புதிய திட்டங்கள் ஆகியவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம்